தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக பயணிக்கும் இருசக்கர வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையமான (NHAI) இன்று ( ஜூன் 26 ) தெளிவுபடுத்தியுள்ளது.
சமீப காலமாக, பல்வேறு சமூக வலைதளங்களில் “இருசக்கர வாகனங்களுக்கும் இனி நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்” எனக் கூறி செய்திகள் பரவியுள்ளன. இதனால் பொதுமக்கள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மத்திய அரசு இருசக்கர வாகனங்களிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக வதந்தி பரவியது. இதை தொடர்ந்து, அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையமான NHAI (National Highways Authority of India) இன்று அதிகாரப்பூர்வாமாக விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், இந்த வதந்திகளை முற்றிலும் மறுக்கும் வகையில், NHAI சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் எந்த திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை என்றும், சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மக்களுக்கு தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் "மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் போன்ற இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் விதிக்கப்படும்" என கூறிய செய்திகள் பரவியுள்ளன. இதனால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த விளக்கம் பொதுமக்களில் கவலையை நீக்கியுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு வகையான வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் போதிலும், இருசக்கர வாகனங்கள் அதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன என்பது மறுபடியும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், இருசக்கர வாகனங்கள் கட்டண வசூலிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. இது தற்போது அமலில் உள்ளது, என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வதந்திகள், பொதுமக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால், அவற்றை நம்ப வேண்டாம் என்றும், உத்தியோகபூர்வமான தகவல்களையே நம்ப வேண்டும் என்றும் NHAI பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
இது தொடர்பான எந்த மாற்றத்தையும் அரசு அறிவிப்பதற்கு முன், அந்த வகையான தகவல் முற்றிலும் தவறானது எனும் வகையில் தற்போது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமீப காலமாக, பல்வேறு சமூக வலைதளங்களில் “இருசக்கர வாகனங்களுக்கும் இனி நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்” எனக் கூறி செய்திகள் பரவியுள்ளன. இதனால் பொதுமக்கள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மத்திய அரசு இருசக்கர வாகனங்களிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக வதந்தி பரவியது. இதை தொடர்ந்து, அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையமான NHAI (National Highways Authority of India) இன்று அதிகாரப்பூர்வாமாக விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், இந்த வதந்திகளை முற்றிலும் மறுக்கும் வகையில், NHAI சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் எந்த திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை என்றும், சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மக்களுக்கு தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் "மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் போன்ற இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் விதிக்கப்படும்" என கூறிய செய்திகள் பரவியுள்ளன. இதனால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த விளக்கம் பொதுமக்களில் கவலையை நீக்கியுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு வகையான வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் போதிலும், இருசக்கர வாகனங்கள் அதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன என்பது மறுபடியும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், இருசக்கர வாகனங்கள் கட்டண வசூலிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. இது தற்போது அமலில் உள்ளது, என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வதந்திகள், பொதுமக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால், அவற்றை நம்ப வேண்டாம் என்றும், உத்தியோகபூர்வமான தகவல்களையே நம்ப வேண்டும் என்றும் NHAI பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
இது தொடர்பான எந்த மாற்றத்தையும் அரசு அறிவிப்பதற்கு முன், அந்த வகையான தகவல் முற்றிலும் தவறானது எனும் வகையில் தற்போது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.