இந்திய விண்வெளி வரலாற்றில் முக்கியமான ஒரு அத்தியாயமாகக் கருதப்படும் Axiom-4 திட்டம், தற்போது மூன்றாவது முறையாக பயணத்துக்கான ஆயத்தத்தில் இறங்கியுள்ளது. இந்திய விண்வெளி வீரராக தேர்வுசெய்யப்பட்ட சுபான்ஷூ சுக்லா உள்பட நான்கு பேர் கொண்ட இந்தக் குழு, 2025 ஜூன் 19ஆம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு புறப்பட உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Axiom Space நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த மிஷன், தனியார் நிறுவனங்களின் பங்குகொள்வது மூலமாக, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) மனிதர்களை அனுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாகும். ஆரம்பத்தில் 2024 இறுதி அல்லது 2025 ஏப்ரலில் புறப்பட திட்டமிடப்பட்ட இந்த பயணம், தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் வானிலைச் சிக்கல்கள் காரணமாக இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜூன் 19 ஆம் தேதி பயணம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி என மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 6 மாதங்களாக NASA மற்றும் Axiom Space தலைமையிலான தீவிர பயிற்சிகளை முடித்து, விண்வெளி மற்றும் குறைந்த ஈர்ப்பு நிலைமையிலான மருத்துவ, தொழில்நுட்ப பரிசோதனைகளை நடத்தத் தயாராகி உள்ளனர்.
சுபான்ஷூ சுக்லா இந்த மிஷனில் பங்கேற்பது, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே விண்வெளித் துறையில் வளர்ந்து வரும் கூட்டுறவின் முக்கிய எடுத்துக்காட்டாகும். ISRO மற்றும் Axiom Space ஆகியவை இணைந்து பணியாற்றும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் அதிகமான இந்தியர்களை விண்வெளிக்குள் கொண்டு செல்லும் வாய்ப்புக்களை உருவாக்கும் என நம்பப்படுகிறது.
இந்த பயணம் வெற்றியடையும் பட்சத்தில், சுபான்ஷூ சுக்லா, ராகேஷ் சர்மாவிற்குப் பின் விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். அதேசமயம், தனியார் நிறுவங்களுடன் இணைந்து இந்தியா செயல்படும் முதல் முயற்சி என்பதால் சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
Axiom Space நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த மிஷன், தனியார் நிறுவனங்களின் பங்குகொள்வது மூலமாக, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) மனிதர்களை அனுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாகும். ஆரம்பத்தில் 2024 இறுதி அல்லது 2025 ஏப்ரலில் புறப்பட திட்டமிடப்பட்ட இந்த பயணம், தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் வானிலைச் சிக்கல்கள் காரணமாக இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜூன் 19 ஆம் தேதி பயணம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி என மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 6 மாதங்களாக NASA மற்றும் Axiom Space தலைமையிலான தீவிர பயிற்சிகளை முடித்து, விண்வெளி மற்றும் குறைந்த ஈர்ப்பு நிலைமையிலான மருத்துவ, தொழில்நுட்ப பரிசோதனைகளை நடத்தத் தயாராகி உள்ளனர்.
சுபான்ஷூ சுக்லா இந்த மிஷனில் பங்கேற்பது, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே விண்வெளித் துறையில் வளர்ந்து வரும் கூட்டுறவின் முக்கிய எடுத்துக்காட்டாகும். ISRO மற்றும் Axiom Space ஆகியவை இணைந்து பணியாற்றும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் அதிகமான இந்தியர்களை விண்வெளிக்குள் கொண்டு செல்லும் வாய்ப்புக்களை உருவாக்கும் என நம்பப்படுகிறது.
இந்த பயணம் வெற்றியடையும் பட்சத்தில், சுபான்ஷூ சுக்லா, ராகேஷ் சர்மாவிற்குப் பின் விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். அதேசமயம், தனியார் நிறுவங்களுடன் இணைந்து இந்தியா செயல்படும் முதல் முயற்சி என்பதால் சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.