இந்தியாவில் உள்ள மக்கள் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வசதியாக மத்திய பாஜக அரசு மும்மொழிக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு
மேலும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் வடமாநிலங்களிலும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் மகாராஷ்டிரா அரசு மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது. இதற்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பாஜக அரசுக்கு மாராட்டிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கல்வி நிலையங்களில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், மாநில அரசு வெளியிட்டிருந்த மும்மொழிக் கொள்கை அரசாணையை ரத்து செய்துள்ளது.
பின்வாங்கி பாஜக அரசு
அதேபோல் மாநிலம் முழுவதும் மொழிக்கொள்கை அமல்படுத்தும் விதத்தை ஆய்வு செய்ய புதிய வல்லுநர் குழுவை அமைக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. முன்னதாக மாநில பள்ளிக்கல்வித்துறை ஏப்ரம் மாதம் வெளியிட்ட அரசாணையில், தனியார் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளும் 8ம் வகுப்பு முதல் இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு
மேலும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் வடமாநிலங்களிலும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் மகாராஷ்டிரா அரசு மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது. இதற்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பாஜக அரசுக்கு மாராட்டிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கல்வி நிலையங்களில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், மாநில அரசு வெளியிட்டிருந்த மும்மொழிக் கொள்கை அரசாணையை ரத்து செய்துள்ளது.
பின்வாங்கி பாஜக அரசு
அதேபோல் மாநிலம் முழுவதும் மொழிக்கொள்கை அமல்படுத்தும் விதத்தை ஆய்வு செய்ய புதிய வல்லுநர் குழுவை அமைக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. முன்னதாக மாநில பள்ளிக்கல்வித்துறை ஏப்ரம் மாதம் வெளியிட்ட அரசாணையில், தனியார் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளும் 8ம் வகுப்பு முதல் இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.