கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஹிலியானா கிராமத்தில் வசித்து வரும் கணேஷ் பூஜாரி (42), பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேகா, ஷங்கரநாராயணா என்ற பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராகப் பணிபுரிந்துள்ளார். ரேகா அதிக நேரம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் ஒருமுறை போலீஸ் தலையிட்டு சமாதானம் செய்யும் அளவிற்கு தீவிரமடைந்துள்ளது.மேலும் போலீசார் தம்பதியிடம் 'இனி சண்டையிட மாட்டோம்' என எழுதியும் வாங்கியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கணேஷ் பூஜாரி வேலை முடிந்து தாமதமாக வீட்டிற்கு வந்தபோது, மனைவி ரீல்ஸ் பார்த்து கொண்டிருப்பதை கண்டு கோபம் அடைந்துள்ளார். தான் வந்தது தெரியாமல் ரேகா ரீல்ஸ் பார்த்ததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த கணேஷ் பூஜாரி, கத்தியினை எடுத்து மனைவி ரேகா கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால், ரேகா துடிதுடித்து இறந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பான தகவலை அடுத்து போலீசார் கணேஷ் பூஜாரி வீட்டுக்கு விரைந்துள்ளனர். மேலும், ரேகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து, கணேஷ் பூஜாரியை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கு அடிமையான மனைவியை, கணவன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் உடுப்பி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதல் ஒருமுறை போலீஸ் தலையிட்டு சமாதானம் செய்யும் அளவிற்கு தீவிரமடைந்துள்ளது.மேலும் போலீசார் தம்பதியிடம் 'இனி சண்டையிட மாட்டோம்' என எழுதியும் வாங்கியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கணேஷ் பூஜாரி வேலை முடிந்து தாமதமாக வீட்டிற்கு வந்தபோது, மனைவி ரீல்ஸ் பார்த்து கொண்டிருப்பதை கண்டு கோபம் அடைந்துள்ளார். தான் வந்தது தெரியாமல் ரேகா ரீல்ஸ் பார்த்ததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த கணேஷ் பூஜாரி, கத்தியினை எடுத்து மனைவி ரேகா கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால், ரேகா துடிதுடித்து இறந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பான தகவலை அடுத்து போலீசார் கணேஷ் பூஜாரி வீட்டுக்கு விரைந்துள்ளனர். மேலும், ரேகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து, கணேஷ் பூஜாரியை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கு அடிமையான மனைவியை, கணவன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் உடுப்பி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.