இந்தியா

இன்ஸ்டாகிராமில் குறைந்த ஃபாலோவர்ஸ்.. கணவன் மீது போலீசில் புகார் அளித்த மனைவி

உத்தரப்பிரதேசத்தில் தனது கணவன் வீட்டு வேலை செய்ய வற்புறுத்தியதாகவும், அதனால் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்ததாகவும் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் குறைந்த ஃபாலோவர்ஸ்.. கணவன் மீது போலீசில் புகார் அளித்த மனைவி
woman files police complaint against husband on losing 2 Instagram followers
இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் பதிவிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களது ரீலிஸ் ட்ரெண்ட் ஆனால், ஃபாலோவர்ஸ் (பின் தொடர்பாளர்கள்) எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்காகவே பலரும் பலவிதமான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த ரீலிஸ் மோகம் அதிகரித்து வரும் நிலையில், ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்ததால் தனது கணவன் மீது மனைவி புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம், ஹாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிஷா என்ற பெண் தினமும் இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும், இவரது கணவன் விஜேந்திரா வீட்டு வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதனை கேட்ட நிஷா, வீட்டு வேளையில் ஈடுபடுவதோடு ரீலிஸ் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டு வெளியில் ஈடுபட்டதால் சரியாக ரீலிஸ் பதிவிட முடியவில்லை என்றும், அதனால் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் குறைந்து விட்டதாக நிஷா தனது கணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கணவன் வீட்டை விட்டு வெளியேறிய நிஷா, ஹாப்பூர் மாவட்டத்தின் பில்குவாவில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். மேலும், ஹாப்பூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்ற நிஷா, தனது கணவன் மீது புகார் அளித்துள்ளார்.

அதில், "என் கணவர் வீட்டு வேலை செய்ய சொல்லி வற்புறுத்துகிறார். இதனால் என்னால் ரீலிஸ் பதிவிட முடியாமல் போனது. தினமும் 2 ரீலிஸ் பதிவிடுவேன். ஆனால் வீட்டு வேலைகளை செய்ததால் 2 ஃபாலோவர்ஸ் குறைந்துவிட்டனர். மேலும், ரீலிஸ் எடுக்க எனக்கு நேரம் கிடைப்பதில்லை" என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, மனைவி நிஷா மீது புகார் அளித்த கணவன் விஜேந்திரா, "நிஷா எப்போதும் இன்ஸ்டராகிமில் ரீலிஸ் செய்து கொண்டிருக்கிறார். இதனால் அவர் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தம்பதியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார், ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும் இருவரும் ஒற்றுமையாக இருக்க அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பிவித்துள்ளனர். ஃபாலோவர்ஸ் குறைத்துக்காக கணவர் மீது மனைவி புகார் அளித்த சம்பவம் சமூக வலைதளத்தில் பேசு பொருளாகி உள்ளது.