அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க டிக்கெட் எடுத்த பூமி சௌகான் என்ற பெண் வாகன நெரிசலில் சிக்கி விமானத்தை தவறவிட்டதால் நூலிழையில் உயிர் தப்பினார். விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் அவர் அந்த விமானத்தை தவறவிட்டார்.
ஏர் இந்தியா விமானம் விபத்து..
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விழுந்து நொறுங்கி பெரும் விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில், பயணம் செய்த 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் காரர்கள், 7 போர்த்துகீசியர்கள், ஒரு கனேடியர், இரு பைலட்கள், 10 ஊழியர்கள் என மொத்தம் 242 பேரும் உயிரிழந்தாக அகமதாபாத் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். ஆனால் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்தார். இவர் லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் மக்களை சந்திக்க சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இச்சம்பவம் அவரது குடும்பம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நூலிழையில் உயிர் தப்பிய பெண்..
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பூமி சௌகான் என்ற பெண் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருந்தார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் லண்டன் செல்லும் விமானத்தை தவறவிட்டுள்ளார். இதனால் அவர் நூலிழையில் உயிர் உயிர் தப்பினார்.
இதுகுறித்து பூமி சௌகான் கூறியதாவது, "நான் 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினேன். நான் செல்லவிருந்த விமானம் விபத்துக்குள்ளானது என்ற செய்தியறிந்து என் உடல் நடுங்குகிறது. விபத்தில் அனைவரும் உயிரிழந்ததை பற்றி கேள்விப்பட்ட பிறகு நான் முற்றிலும் உடைந்துவிட்டேன். என்னால் பேச முடியவில்லை. என் கணபதி பாப்பா என்னைக் காப்பாற்றினார்" என்று அவர் கூறினார்.
பூமி சௌகான் ஏர் இந்தியா விமானத்தில் தனியாக லண்டனுக்குத் திரும்பத் தயாராக இருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு விடுமுறைக்காக இந்தியா வந்த அவர், தனது கணவருடன் லண்டனில் வசிக்கிறார்.
பூமி சௌகான் போக்குவரத்து நெரிசல் காரணமாக மதியம் 1.30 மணிக்கு விமான நிலையம் வந்துள்ளார். மேலும் ஏர் இந்தியா விமானம் 1.38 மணியளவில் புறப்பட்டு சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா விமானம் விபத்து..
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விழுந்து நொறுங்கி பெரும் விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில், பயணம் செய்த 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் காரர்கள், 7 போர்த்துகீசியர்கள், ஒரு கனேடியர், இரு பைலட்கள், 10 ஊழியர்கள் என மொத்தம் 242 பேரும் உயிரிழந்தாக அகமதாபாத் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். ஆனால் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்தார். இவர் லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் மக்களை சந்திக்க சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இச்சம்பவம் அவரது குடும்பம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நூலிழையில் உயிர் தப்பிய பெண்..
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பூமி சௌகான் என்ற பெண் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருந்தார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் லண்டன் செல்லும் விமானத்தை தவறவிட்டுள்ளார். இதனால் அவர் நூலிழையில் உயிர் உயிர் தப்பினார்.
இதுகுறித்து பூமி சௌகான் கூறியதாவது, "நான் 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினேன். நான் செல்லவிருந்த விமானம் விபத்துக்குள்ளானது என்ற செய்தியறிந்து என் உடல் நடுங்குகிறது. விபத்தில் அனைவரும் உயிரிழந்ததை பற்றி கேள்விப்பட்ட பிறகு நான் முற்றிலும் உடைந்துவிட்டேன். என்னால் பேச முடியவில்லை. என் கணபதி பாப்பா என்னைக் காப்பாற்றினார்" என்று அவர் கூறினார்.
பூமி சௌகான் ஏர் இந்தியா விமானத்தில் தனியாக லண்டனுக்குத் திரும்பத் தயாராக இருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு விடுமுறைக்காக இந்தியா வந்த அவர், தனது கணவருடன் லண்டனில் வசிக்கிறார்.
பூமி சௌகான் போக்குவரத்து நெரிசல் காரணமாக மதியம் 1.30 மணிக்கு விமான நிலையம் வந்துள்ளார். மேலும் ஏர் இந்தியா விமானம் 1.38 மணியளவில் புறப்பட்டு சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.