விளையாட்டு

யார் இந்த பவுமா? டெஸ்ட் போட்டியில் தோல்வியே அறியாத வெற்றிக்கேப்டனின் கதை!

தென் ஆப்பிரிக்க அணியின் முதல் கருப்பினத்தை சேர்ந்த கேப்டன் பல்வேறு விமர்சனங்களை தாண்டி, 27 ஆண்டுகளுக்கு பிறகு தனது நாட்டின் ஏக்கத்தை நிறைவு செய்து, ஐசிசி-யின் கோப்பையை தன்னுடைய வெற்றிப்படையின் மூலம் கைப்பற்றி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

யார் இந்த பவுமா? டெஸ்ட் போட்டியில் தோல்வியே அறியாத வெற்றிக்கேப்டனின் கதை!
யார் இந்த பவுமா? டெஸ்ட் தோல்வியே அறியாத வெற்றிக்கேப்டனின் கதை!
தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு தொடர்களில் வெற்றியின் விளிம்பு வரை சென்று தோல்வியை தழுவுவதால், 'Chokers' என்ற அடைமொழிக்கு சொந்த காரர்களாகவே மாறினர். அந்த வரலாற்றையும், இனி இவர்கள் ஐசிசியின் கோப்பைகளை கனவில் தான் வாங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் இவர்களை கிண்டல் செய்யும் தொணியில் கருத்துகளைக் கூறி வந்தனர்.

ஐசிசி வரலாற்றியின் கடந்த 27 வருடமாக தோல்வியின் முகமாக திகழ்ந்த தென் ஆப்பிரிக்க அணியை, இன்று உலகமே திரும்பி பார்க்கும் வகையில் மாற்றி, வெற்றி கேப்டன் என்ற பெருமையை படைத்திருக்கிறார் டெம்பா பவுமா (Temba Bavuma). இவரது இன்றைய வெற்றி நூற்றாண்டுகள் பேசும் வகையில் அமைந்துள்ளது. காரணம், கிரிக்கெட் உலகில் மன்னனாக திகழும் ஆஸ்திரேலிய அணியை, இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்த வெற்றியை ருசித்துள்ளது பவுமாவின் படை.



Image


தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் டெம்பா பவுமா (Temba Bavuma) தனது சிறப்பான தலைமையால் உலக கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். இவர் 2021ல் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு, பின்னர் 2023ல் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்றார். முக்கியமாக, இவர் தலைமையில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டிகளில் இன்னும் ஒரு தோல்வியும் சந்திக்கவில்லை என்பது வரலாற்றுச் சிறப்பாக கருதப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவின் வெற்றியை உலக நாடுகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றிக்கு முழுக்காரணம் பவுமாவும் அவரது படையும் தான் என்று பலரும் கருத்து தெரிவிக்கும் நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற நாள் முதல் தான் விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியுடனும், ஒரு போட்டியில் டிராவுடனும் சமன் செய்திருப்பார். ‘தோல்வியே தெரியாத கேப்டன்’ எனும் பட்டம் தற்போது வரை அவரிடத்தில் மட்டுமே உள்ளது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 27 வருடத்திற்கு பிறகு ஐசிசி-யின் கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

Image

டெம்பா பவுமா, தென் ஆப்பிரிக்காவின் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை பெற்றவர். இட ஒதுக்கீடு அடிப்படையில் கேப்டனாக அவதாரம் எடுத்ததாலும், தன்னுடைய உயரத்தின் காரணமாகவும், பல்வேறு விமர்சங்களுக்கு ஆளானார். உருவகேலிக்கு ஆளாக்கப்பட்டவர் இன்று உலகமே போற்றும் வகையில் உயர்ந்து நிற்கிறார்.

2016ஆம் ஆண்டு தனது முதல் சதத்தை அடித்து நாடு முழுக்க கவனத்தை பெற்றவர். மிகவும் அமைதியான, துல்லியமான பேட்டிங் ஸ்டைல் கொண்ட இவர், தன்னை வெற்றி நாயகனாக, தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றி அணித் தலைவராக நிரூபித்துள்ளார். அணியின் மனோநிலை, வீரர்களிடையே நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை உயர்த்தி, ஆட்டத்தின் கட்டுப்பாட்டை சரியாக கையாள்கிறார்.

தென் ஆப்பிரிக்க அணியின் முதல் கருப்பின கேப்னாக தனது அணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறார். தென் ஆப்பிரிக்க வரலாற்றில் பவுமா என்கிற பெயர்தான் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதற்கான ஆதாரமாக இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி திகழ்கிறது.

2023 உலகக்கோப்பையில், தென் ஆப்ரிக்க அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இதற்காக நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தென் ஆப்பிரிக்காவிற்காக வேதனை தெரிவித்தனர். அதே நேரத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானார். தற்போது தோல்வியை கண்டு துவளாமல், சீறு கொண்ட சிங்கம் போல 27 ஆண்டுகால கனவை தென் ஆப்பிரிக்காவின் கனவை பவுமா நனவாக்கியிருக்கிறார் . இவரது இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.