சென்னையின் மாநகரில், வாகன நெரிசல் ஒருப்புறம் அதிகரித்து வரும் நிலையில், மெட்ரோ சேவையினை பயன்படுத்துவோர் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பான அதே நேரத்தில் வசதியான பயணத்திற்கு மெட்ரோ உதவுகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 92,19,925 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப்பணிகள் வேகமெடுத்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
”மெட்ரோ இரயில்களில் பயணிக்க CMRL பயண அட்டையுடன், கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (NCMC Card -சிங்கார சென்னை அட்டை) அறிமுகப்படுத்தியது. 01.08.2025 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC) முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.
பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளவும். மேலும், பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்ச மதிப்பை (ரூ.50/-க்கும் குறைவாக) அடையும் போது, CMRL பயண அட்டையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்குப் பதிலாக, பயணிகள் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (NCMC) எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய தேசிய பொதுபோக்குவரத்து அட்டைக்கு (NCMC) மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொது போக்குவரத்து அட்டை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், பயணிகள் மெட்ரோ மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே அட்டையினை பயன்படுத்தி இலகுவாக பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 92,19,925 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப்பணிகள் வேகமெடுத்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
”மெட்ரோ இரயில்களில் பயணிக்க CMRL பயண அட்டையுடன், கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (NCMC Card -சிங்கார சென்னை அட்டை) அறிமுகப்படுத்தியது. 01.08.2025 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC) முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.
பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளவும். மேலும், பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்ச மதிப்பை (ரூ.50/-க்கும் குறைவாக) அடையும் போது, CMRL பயண அட்டையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்குப் பதிலாக, பயணிகள் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (NCMC) எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய தேசிய பொதுபோக்குவரத்து அட்டைக்கு (NCMC) மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொது போக்குவரத்து அட்டை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், பயணிகள் மெட்ரோ மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே அட்டையினை பயன்படுத்தி இலகுவாக பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.