K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

மீண்டும் மீண்டுமா..? நாதகவில் இருந்து தொடர்ந்து விலகி வரும் தொண்டர்கள்.. கலக்கத்தில் சீமான்

நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உட்பட அக்கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகியுள்ளனர்.

மீண்டும் உருவாகும் புயல் சின்னம்..?  அச்சத்தில் மக்கள்

டிசம்பர் 20-ஆம் தேதிக்கு பிறகு புயல் சின்னம் மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த 7 நாட்களுக்கும் மழையோ மழைதான்... மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆசை வார்த்தை கூறி பெண்களை ஏமாற்றிய பலே காவலர்.. வெளியான திடுகிடும் தகவல்

காவலர் செல்லதுரை பல பெண்களிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பணம் மற்றும் நகைகளை ஏமாற்றிய நிலையில் அவரை  ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து மைலாப்பூர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் 'க்யூ ஆர்' கோடு... குஷியான குடிமகன்கள்... !

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், 'க்யூ ஆர்' கோடு வசதி மூலம் மது விற்பனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி.. கார் பார்க்கிங்காக மாறிய மேம்பாலம் 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கார்களை மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

ஜாமினில் வெளிவந்த நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்

நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை.. திறனாய்வு தேர்வு தேதி அறிவிப்பு

ஊரகப் பகுதியில் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படும் முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

ஆட்டம் காட்டக் காத்திருக்கும் ஃபெங்கல் புயல்... தயார் நிலையில் காவல்துறையினர்!

ஃபெங்கல் புயலை எதிர்கொள்ளும் வகையில் சென்னை காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதாக உதவி ஆணையர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற டிஐஜி மகன் வீட்டில் பாலியல் தொழில்... பிடிபட்ட ஆப்ரிக்க நாட்டு பெண்கள்!

சென்னையில் ஓய்வு பெற்ற டிஐஜி மகன் வீட்டில் ஆப்பிரிக்க பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்... சினிமாவை மிஞ்சிய ஓட்டல் அதிபர்கள்.. சிக்கியது எப்படி?

கப்பல் மூலமாக மெத் போதை பொருள் சப்ளை செய்து வந்த ஓட்டல் அதிபர்கள் இருவரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

புயல் உருவாவதில் மேலும் தாமதம்... ஒரே இடத்தில் நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 குரூப் 4 பணியிடங்களுக்கு ஜனவரியில் கலந்தாய்வு..  TNPSC அறிவிப்பு..!

குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் நடைபெறும் எனவும், தகுதிபெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி மெட்ரோ பணி.. கட்டுமான கம்பிகள் சாலையில் விழும் அபாயம்..!

பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயில் பணிக்காக கட்டப்பட்டு வரும் தூணில் கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் 231 வழக்குகள்.. அதிரவைக்கும் காவல்துறை ரிப்போர்ட்..!

சென்னையில் அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த பத்தாண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவன மோசடி விவகாரம்.. அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகும் ED

தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் வருகை.. ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீலகிரிக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்

திருமணம் செய்வதாக ஏமாற்றி மோசடி செய்த இளைஞர்... சீரியல் நடிகை பரபரப்பு புகார்

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 6 லட்சம் பணம், நகை பறித்து கொண்டு மோசடியில் ஈடுபட்ட காதலன் மீது சின்னத்திரை நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Fengal Cyclone:  சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்... தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை....

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு 7.30 மணிக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

டீலர்கள் வைத்து போதைப்பொருள் கடத்தல்.. சகோதரர்களை அலேக்காக தூக்கிய போலீஸார்

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை தெற்கு மண்டல தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

வாடகை தாயாக இருக்க 2 பெண்கள் செய்த காரியம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னையில் வாடகைத் தாயாக இருக்க போலி ஆவணங்களை சமர்ப்பித்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

விளக்கேற்றும் போது புடவையில் தீ.. தொலைக்காட்சி ஊழியரின் தாய் உயிரிழப்பு

சாமி படத்திற்கு விளக்கேற்றும் போது புடவையில் தீப்பற்றி மூதாட்டி உயிரிழந்த சோக சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

15 பவுன் நகை அபேஸ்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி... மாஸ்டர் பிளான் போட்டவருக்கு கைவிலங்கு!

ராஜபாளையத்தில் மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் கொலையாளி குறித்த சிசிடிவி காட்சிகள்வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... வீடியோ மற்றும் ஆடியோவால் பரபரப்பு!

கரூரில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக ஆதாரங்களுடன் வெளியான புகாரை அடுத்து, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் செயல்பட்டு வந்த ஸ்பா-க்கள் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

வலுவடைகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... பேய் அடி அடிக்கப்போகுது!

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.