K U M U D A M   N E W S

தமிழ்நாடு

அதிகனமழையினால் நீலகிரியில் ரெட் அலர்ட்.. சுற்றுலாத்தலங்கள் மூடல்..!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

துணை நடிகையுடன் சல்லாபம்.. கம்பி நீட்டிய கனடா என்ஜினீயருக்கு போலீசார் வலை

திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்து கொண்டு ஏமாற்றி விட்டதாக துணை நடிகை அளித்த புகாரை தொடர்ந்து கனடா நாட்டு சாப்ட்வேர் என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நுங்கு சாப்பிட அழைத்த சிறுவர்கள்.. டக்கென்று காரை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

’சார் வாங்க சார்.. நுங்கு சாப்பிட்டு போலாம்’, என அன்போடு சிறுவர்கள் அழைத்ததும், உடனே வாகனத்தை நிறுத்தி நுங்கு சாப்பிட்டுவிட்டு பொதுமக்களுக்கும் வாங்கி கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோடை மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது – அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டில் கோடை மழையால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது அரியலூரில் புதிய வழித்தடங்களில் மகளிர் கட்டணமில்லா பயணப் பேருந்துகளை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

’கும்பலாக சுத்துவோம்.. அய்யோ அம்மான்னு கத்தவோம்’.. ரேசில் ஈடுபட்ட இளசுகள் அதிரடி காட்டிய போலீஸ்

அண்ணாநகரில் இருந்து கும்பலாக அதிவேகமாக வாகனத்தை இயக்கிய விவகாரத்தில் பத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஒன்பது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வார இறுதியில், அதிவேகமாக வாகனத்தை இயக்கி ரீல்ஸ் வெளியிட ஓட்டியதாக இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

81 வயது மூதாட்டியை தங்க நகைக்காக கழுத்தை நெரித்த பெண்.. மயிலாப்பூரில் அதிர்ச்சி

சென்னை மயிலாப்பூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த 81 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து தங்க நகைகள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் கல்வி விருது விழா..!

10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தவெக சார்பில் வரும் 30ம் தேதி கல்வி விருது விழா நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்களில் கைவரிசை - 3 பேர் கைது!

சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்களில் வாடிக்கையாளர் பணத்தை முடக்கி நூதன முறையில் பணத்தை திருடிய உத்திரப்பிரேதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை என்றும், சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் என்று வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இன்றும் ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ள நிலையில் இன்றும், 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.