K U M U D A M   N E W S

?????????

பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் மரணம்- பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

தன்னை பார்க்க வருகைத்தரும் நோயாளிகளிடம் 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று சிகிச்சை அளித்து வந்த புகழ்பெற்ற பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் கனக ரெத்தினம்பிள்ளை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரளான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தவெகவில் இணைந்த ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தவெகவில் இணைந்த ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மாணவியின் கால்களை உடைத்து பாலியல் தொல்லை...உண்மையை ஒப்புக்கொண்ட காவலாளி

சிட்லபாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மேத்யூ(50) என்ற காவலாளி கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து ஆளுநர் ரவி சாமி தரிசனம் செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்-இபிஎஸ்

அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர்கள் தான் டார்கெட்.. பிரபல தனியார் வங்கி பெயரில் மோசடி

பிரபல தனியார் வங்கி பெயரில் நாடு முழுவதும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல், தென்னிந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து போல நீலகிரியில் ரூ.5 கோடியில் திட்டம்-ஆ.ராசா எம்.பி

தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு விலையில்லா தனி வீட்டு மனை பட்டா வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என ஆ.ராசா புகழாரம்

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் பாமகவுக்கு இதுதான் கடைசி தேர்தல்- ஜோதிமணி எம்.பி

பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

ரயில் சக்கரத்தில் சிக்கிய இளம் பெண்.. இரு கால்களை இழந்த சோகம்

குளித்தலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏற முயன்றபோது, ரயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்துள்ளார்.

அதிவேகமாக சென்ற கார்.. சினிமா பணியில் துரத்திய போலீசார்

செய்யாறு அருகே தடுப்புகளை மோதிவிட்டு அதிவேகமாக சென்ற காரை போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

பணமாலை அணிவித்து அமைச்சருக்கு வரவேற்பு...தவெக மா.செ. செயலால் தி.மலையில் பரபரப்பு

த.வெ.க மாவட்ட செயலாளரின் புதுமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலுக்கு பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு?- அன்புமணி ராமதாஸ் கேள்வி

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதைத் தடுக்க தவறிய திமுக அரசின் முகமூடி கிழிந்துள்ளது என அன்புமணி விமர்சித்துள்ளார்.

தி.மலையில் காலையில் சுட்டெரித்த வெயில்....மாலையில் கொட்டித்தீர்த்த கனமழை

திருவண்ணாமலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் அண்ணாமலையாரை தரிசிக்க கொட்டும் மழையிலும் நீண்ட காத்திருந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

சினிமா கவர்ச்சியால் மட்டும் விஜய்யால் வெற்றி பெற முடியாது – துரை வைகோ

2026 தேர்தல் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்பதே மதிமுகவின் நிலைப்பாடு என துரை வைகோ தெரிவித்தார்.

டெல்லியைப் போல் தமிழகத்திலும் ஆட்சி அமைப்போம் – எல்.முருகன்

மதுரை மண்ணுக்குரிய முத்துராமலிங்க தேவரை அமித்ஷா நினைவு கூர்ந்து இருக்கிறார், நாம் அரசியலுக்காக அதை செய்யவில்லை என எல்.முருகன் பேட்டி

326 பேருடன் புறப்பட்ட விமானத்தில் இயந்திரக்கோளாறு...கடைசி நிமிடத்தில் நடந்த பரபரப்பு

சென்னையில் இருந்து துபாயிக்கு 326 பேருடன் புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் திடீரென இயந்திரக்கோளாறு காரணமாக ஒடுபாதைக்கு செல்லும் முன் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமித்ஷா தலைமையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் – பலத்த சோதனைக்கு பிறகே அனுமதி

நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்- பரமத்தி வேலூரில் பரபரப்பு

சித்தம் பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியில் சேலம் சரக டிஐஜி உமா சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.

தாய்க்கு பிரியாணி வாங்கிவந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!

பக்ரீத் பண்டிகை அன்று தாய்க்கு பிரியாணி வாங்க கொண்டு வீடு திரும்பிய சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீனாட்சி அம்மனை வழிபட்ட அமித்ஷா – உற்சாகமாக வரவேற்ற மதுரை ஆதீனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அமித்ஷாவை மதுரை ஆதீனம் வரவேற்றார்.

அடியாள் டூ திமுக வட்டச் செயலாளர்..! யார் இந்த கோட்டூர் சண்முகம்? அமைச்சருடனான தொடர்பு உருவானது எப்படி?

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஆறுதல் அளித்தாலும் 'யார் அந்த சார்' என்ற கேள்வி இன்னமும் சோஷியல் மீடியாக்களில் எதிரொலித்துக்கொண்டே இருப்பது தி.மு.கவின் இமேஜை காலி செய்து வருகிறது. இந்த நிலையில், அமைச்சருடன் தொடர்பில் இருந்த வட்டச் செயலாளருக்கும் ஞானசேகரனுக்கு என்ன தொடர்பு, அமைச்சருக்கு அந்த வட்டச் செயலாளருக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. வோட்காவில் தூக்க மாத்திரை.. கழுத்தை நெரித்து கொலை செய்த முன்னாள் காதலன்!

கொடுங்கையூரில் லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த பெண்ணை தூக்க மாத்திரை கொடுத்து மசாஜ் செய்யும் போது கழுத்தை நெறித்து, முன்னாள் காதலரான மருத்துவர் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

'எங்கோ பிறந்தோம், இங்கே இணைந்தோம்'..32 ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்கள்.. அரியலூரில் நெகிழ்ச்சி!

32 ஆண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளியில் 10 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் வாட்ஸப் மூலம் ஒன்றிணைந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.5 பார்லே ஜி 2,400 ரூபாய்க்கு... நிவாரணமா? ரத்தம் உறுஞ்சும் மிருகமா? மிரளவைக்கும் காசாவின் விலை உயர்வு

இந்தியாவில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டை, காசாவில் வசிப்பவர்கள் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலாலும், மறுபுறம் பசி பட்டினியாலும் காசா மக்கள் செத்து மடியும் நிலையில், அங்குள்ள உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது உலகளவில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோவில் வந்த பயணியிடம் செல்போன் அபேஸ்.. ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் கைது!

மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பயணியிடம் செல்போன் பறித்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், செல்போன் மீட்கப்பட்டு, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.