K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

வலிப்பால் உடல்நலக் குறைவு.. சிகிச்சை முடிந்து ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் மீண்டும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு.. வெளியேற சொன்னால் தற்கொலை செய்து கொள்வோம்.. பொதுமக்கள் கவலை

அரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மக்களை வெளியேற கூறி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் தங்களை காலி செய்ய சொன்னால் தற்கொலை செய்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என  மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். 

பத்து மணிநேரம் நடைபெற்ற விசாரணை.. அமலாக்கத்துறை அழைத்தாள் ஆஜராக தயார்- கதிர் ஆனந்த்

எம்.பி. கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறையினர் 10 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய நிலையில் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் வருவேன் என கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. எச்சரிக்கை... தேவையான தகவல் அளிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து..!

பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி, சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது  திரும்பப் பெறப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 6-வது அல்லது 7-வது சம்பள கமிஷன் நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும்  அண்ணா பல்கலைக் கழகம்  அறிவித்துள்ளது. 

திருச்செந்தூரில் தொடர் கடல் அரிப்பு... காரணம் என்ன? களத்தில் இறங்கிய ஆராய்ச்சி குழு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தொடர் கடல் அரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு செய்தனர்.

வேலியே பயிரை மேய்வதா? காவல்துறையினர் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி...!

வேலியே பயிரை மேய்வது போல்,  காவல்துறையினரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான திமுக எம்பி கதிர் ஆனந்திடம் அதிகாரிகள் 3 மணி நேரத்தை கடந்து தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், முழுமையான விசாரணைக்கு பிறகே தகவல்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் அதிர்ச்சி.. மர்மமான முறையில் 7 வகுப்பு படிக்கும் சிறுமி உயிரிழப்பு... போலீசார் விசாரணை..!

கழுத்தில் புடவை சுற்றிய நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணன்... மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவரின் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்... போலீஸ் காவலில் இருந்த குற்றவாளி ஞானசேகரனுக்கு வலிப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரனை காவல்துறையில் போலீஸ் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் போது, திடீரென அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. 

புழல் சிறை வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு...!

தடை செய்யப்பட்ட செலஃபோன் , கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழல் சிறை வளாகத்திற்குள் கண்டறியப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உளவுப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை கோவிலில் தேவாரம் பாடிய சத்குரு குருகுல மாணவர்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சத்குரு குருகுல மாணவர்களின் தேவார பண்ணிசை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நேற்று (ஜன.20) நடைபெற்றது. பாரம்பரிய பண்ணிசை மரபில் மாணவர்கள் பாடிய தேவார பதிகங்களை நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கேட்டு மகிழ்ந்தனர். 

மனைவியை சிலிண்டரால் தாக்கிய கொடூர கணவன் கைது!

குடிபோதையில் சிலிண்டரால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் மீது மனைவி புகார் அளித்த நிலையில், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலைக்கழித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அப்பெண் அலைக்கழிக்கப்படும் வீடியோக் காட்சி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், தற்போது அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடி வழக்கில் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அதிர்ச்சி.. மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி கைது..!

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்.. பாதுகாப்பு பணிக்காக CISF போலீசார் வருகை..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு பாதுகாப்பிற்காக 3 கம்பெணியை சேர்ந்த 240 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈரோட்டிற்கு வருகை புரிந்தனர்.

மருத்துவ கழிவுகள் விவகாரத்தில், ஒப்பந்த  நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்..? தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கழிவுகள் சேகரிக்கும் ஒப்பந்த  நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலிஸ் காவல்.. எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு, கைதான ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் தைரியம் இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் உரையை முழுமையாக வெளியிடுவாரா? ஆர். பி. உதயகுமார் சவால்

தைரியம் இருந்தால், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் மூன்று மணி நேரம் ஆற்றிய உரையை வெளியிடுங்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.

கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது - ஐ ஐ டி இயக்குநர் காமகோடி மீண்டும் திட்டவட்டம்

கோமியம் குடித்தால் நன்மை என்று தான் கூறிய கருத்து  தொடர்பான ஆதாரமான அமெரிக்காவை சேர்ந்த National library of medicine ஆய்வு கட்டுரைகளை ஐஐடி இயக்குனர் காமகோடி வெளியிட்டுள்ளார்.

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை நிலவரம்

தமிழ்நாட்டில் அடுத்த ஏழு தினங்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HMPV வைரஸ் கட்டுக்குள் உள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Hmpv வைரஸ் மிக மிக கட்டுக்குள் இருக்கிறது என்றும் பெரிய அளவில் பதட்டப்படவும், பயப்படவும் வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முதுகலை பொறியியல் படிப்பு.. நுழைவுத் தேர்வு விண்ணப்ப தேதி அறிவிப்பு

முதுகலைப் பொறியியல் படிப்புகளான   எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்விற்கு ஜனவரி 24 -ம் தேதி முதல் பிப்ரவரி 21-ந்  தேதி வரை  விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

Rahul Tikki மறைவு.. Instagram பிரபலத்தின் பதிவால் கொந்தளித்த மக்கள்..!

கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்கிற இன்ஸ்டாகிராம் பிரபலம் சமீபத்தில் விபத்தில் இறந்த Rahul Tikki என்கிற யூடியூப் influencer இறப்புக்கு All is well Coimbatore Will remember என்று மனசாட்சி இல்லாமல் பதிவிட்டுள்ளது சக youtuber-களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

TN Rain: திடீரென வெளுத்து வாங்கிய கனமழை – சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதலே பெய்து வரும் கனமழை