குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் 1.38 மணியளவில் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விழுந்து நொறுங்கி பெரும் விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 69 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் காரர்கள், 7 போர்த்துகீசியர்கள், ஒரு கனேடியர், இரு பைலட்கள், 10 ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். இந்த விபத்தில் ஒரு நபரை தவிர 241 பெரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்தார். இந்த நிலையில், விபத்தில் அதிஷ்டவசமாக விஷவாஸ்குமார் ரமேஷ் என்ற பயணி உயிர் தப்பியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிருடன் இருப்பதை நம்ப முடியவில்லை..
உயிர்தப்பிய விஷவாஷ் குமார் ரமேஷ் அளித்த பேட்டியில், "நான் ஜன்னல் ஓரமாக 11A என்ற இருக்கையில் அமர்ந்திருந்தேன். எல்லாம் என் கண்முன்னே நடந்தது. விமானம் கட்டிடத்தில் விழுந்தபோது முதலில், நான் இறந்துவிட்டதாக நினைத்தேன். பின்னர், நான் இன்னும் உயிருடன் இருப்பதை உணர்ந்தேன்.
நான் அமர்ந்திருந்த சீட் உடைந்து தனியாக வந்ததால் அவசர வழி வழியாக உயிர் தப்பினேன். நான் இருந்த பக்கத்தில் பெரிதாக சேதம் ஏற்படவில்லை. அதனால் கிடைத்த இடத்தை வைத்து விமானத்தில் இருந்து வெளியேறினேன். என்னைச் சுற்றி இருந்த பலரும் இறந்துவிட்டார்கள், சிலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். நான் எப்படித் தப்பித்தேன் என்று எனக்கு இன்னும் புரியவில்லை, நம்பமுடியவில்லை" என்றார்.
இந்த விமானத்தில் 69 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் காரர்கள், 7 போர்த்துகீசியர்கள், ஒரு கனேடியர், இரு பைலட்கள், 10 ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். இந்த விபத்தில் ஒரு நபரை தவிர 241 பெரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்தார். இந்த நிலையில், விபத்தில் அதிஷ்டவசமாக விஷவாஸ்குமார் ரமேஷ் என்ற பயணி உயிர் தப்பியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிருடன் இருப்பதை நம்ப முடியவில்லை..
உயிர்தப்பிய விஷவாஷ் குமார் ரமேஷ் அளித்த பேட்டியில், "நான் ஜன்னல் ஓரமாக 11A என்ற இருக்கையில் அமர்ந்திருந்தேன். எல்லாம் என் கண்முன்னே நடந்தது. விமானம் கட்டிடத்தில் விழுந்தபோது முதலில், நான் இறந்துவிட்டதாக நினைத்தேன். பின்னர், நான் இன்னும் உயிருடன் இருப்பதை உணர்ந்தேன்.
நான் அமர்ந்திருந்த சீட் உடைந்து தனியாக வந்ததால் அவசர வழி வழியாக உயிர் தப்பினேன். நான் இருந்த பக்கத்தில் பெரிதாக சேதம் ஏற்படவில்லை. அதனால் கிடைத்த இடத்தை வைத்து விமானத்தில் இருந்து வெளியேறினேன். என்னைச் சுற்றி இருந்த பலரும் இறந்துவிட்டார்கள், சிலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். நான் எப்படித் தப்பித்தேன் என்று எனக்கு இன்னும் புரியவில்லை, நம்பமுடியவில்லை" என்றார்.