ராஜஸ்தானில், சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் ஒரு இளம் தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 28 ஆம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த ஒருவர் இந்தத் தம்பதியின் சடலங்களைக் கண்டறிந்து, எல்லை பாதுகாப்புப் படைக்கு (BSF) தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அங்கு விரைந்த இல்லை பாதுகாப்பு படையினர் சடலங்களை மீட்டனர்.
மேலும், சடலங்களுடன் கண்டெடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள், இந்தத் தம்பதி பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காண்பித்தன.அந்த ஆண் ரவி குமார் (17) என்றும், பெண் சாந்தி பாய் (15) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், பாகிஸ்தானிய சிம் கார்டு கொண்ட ஒரு மொபைல் போனும் கண்டெடுக்கப்பட்டது.
மேலும், அந்த ஆணின் வாயருகே ஒரு தண்ணீர் கேன் கண்டெடுக்கப்பட்டது. மேலும், அவர்கள் தாகத்தாலும், நீரிழப்பாலும் இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்று, பாலைவனத்தில் வழி தவறியிருக்கலாம் என்றும் கூறினார்.
அந்த பெண் சிவப்பு மற்றும் வெள்ளை வளையல்களை அணிந்திருந்தார். இது பொதுவாக புதிதாகத் திருமணமான மணப்பெண்கள் அணியும் வளையல்கள். இதனால் அவர்கள் சமீபத்தில் திருமணமான தம்பதிகள் என்று தெரியவந்துள்ளது.
மேலும் பாதுகாப்பு படையினர் கூறுகையில், “அந்த இளம் தம்பதி இந்தியாவிற்குப் பயணம் செய்ய விசாவுக்கு விண்ணப்பித்ததாகவும், ஆனால் ஆபரேஷன் சிந்துர்-க்குப் பிறகு எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரித்ததால் அந்த செயல்முறை இழுபறியில் இருந்ததாகவும் கூறினர்.
மேலும், இந்து பாகிஸ்தான் புலம்பெயர் சங்கம் மற்றும் எல்லை மக்கள் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீப் சிங் சோதா கூறுகையில், “பாகிஸ்தானில் சிறுபான்மையினர் குறிவைக்கப்படும் மத ரீதியான துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க இந்தத் தம்பதி இந்தியாவை அடைய முயன்றதாகத் தெரிகிறது. ஒருவேளை அவர்கள் இந்தியாவில் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க விரும்பி இருக்கலாம்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே இருவரது உடல்களையும் கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
கடந்த 28 ஆம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த ஒருவர் இந்தத் தம்பதியின் சடலங்களைக் கண்டறிந்து, எல்லை பாதுகாப்புப் படைக்கு (BSF) தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அங்கு விரைந்த இல்லை பாதுகாப்பு படையினர் சடலங்களை மீட்டனர்.
மேலும், சடலங்களுடன் கண்டெடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள், இந்தத் தம்பதி பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காண்பித்தன.அந்த ஆண் ரவி குமார் (17) என்றும், பெண் சாந்தி பாய் (15) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், பாகிஸ்தானிய சிம் கார்டு கொண்ட ஒரு மொபைல் போனும் கண்டெடுக்கப்பட்டது.
மேலும், அந்த ஆணின் வாயருகே ஒரு தண்ணீர் கேன் கண்டெடுக்கப்பட்டது. மேலும், அவர்கள் தாகத்தாலும், நீரிழப்பாலும் இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்று, பாலைவனத்தில் வழி தவறியிருக்கலாம் என்றும் கூறினார்.
அந்த பெண் சிவப்பு மற்றும் வெள்ளை வளையல்களை அணிந்திருந்தார். இது பொதுவாக புதிதாகத் திருமணமான மணப்பெண்கள் அணியும் வளையல்கள். இதனால் அவர்கள் சமீபத்தில் திருமணமான தம்பதிகள் என்று தெரியவந்துள்ளது.
மேலும் பாதுகாப்பு படையினர் கூறுகையில், “அந்த இளம் தம்பதி இந்தியாவிற்குப் பயணம் செய்ய விசாவுக்கு விண்ணப்பித்ததாகவும், ஆனால் ஆபரேஷன் சிந்துர்-க்குப் பிறகு எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரித்ததால் அந்த செயல்முறை இழுபறியில் இருந்ததாகவும் கூறினர்.
மேலும், இந்து பாகிஸ்தான் புலம்பெயர் சங்கம் மற்றும் எல்லை மக்கள் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீப் சிங் சோதா கூறுகையில், “பாகிஸ்தானில் சிறுபான்மையினர் குறிவைக்கப்படும் மத ரீதியான துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க இந்தத் தம்பதி இந்தியாவை அடைய முயன்றதாகத் தெரிகிறது. ஒருவேளை அவர்கள் இந்தியாவில் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க விரும்பி இருக்கலாம்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே இருவரது உடல்களையும் கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.