தற்போது இங்கிலாந்து மண்ணில் தொடங்கவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான பெயர் 'ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை' (Anderson-Tendulkar Trophy) என பெயர் சூட்டப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். முன்னதாக இரு நாடுகளுக்கிடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இங்கிலாந்தில் விளையாடப்படும் போது 'பட்டோடி கோப்பை' என்றும், இந்தியாவில் விளையாடப்படும் போது 'அந்தோணி டி மெல்லோ கோப்பை' என்றும் அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பெயர் மாற்றத்தால் எழுந்த சர்ச்சை:
பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியான போது, பட்டோடி-யின் புகழை மங்கச்செய்யும் நடவடிக்கை என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும் (ECB), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (BCCI) இதுக்குறித்து கூறுகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு நாடுகளின் தலைசிறந்த வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை கெளரவிக்கும் வகையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.
சச்சினும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பெயர் குறித்த சர்ச்சைகள் எழுந்த போது, “பட்டோடி குடும்பத்தின் இந்திய கிரிக்கெட்டுக்கான பங்களிப்பு மீது தனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. பட்டோடி பெயர் இரு நாடுகளுக்கிடையேயான டெஸ்ட் தொடருடன், தொடர்புடையதாக இருப்பதை உறுதி செய்ய பிசிசிஐ மற்றும் ECB(இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்) ஆகியவற்றுடன் கோரிக்கை விடுத்துள்ளேன்” என தெரிவித்திருந்தார். இதன் விளைவாக, பட்டோடி பெயரில் பதக்கம் வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இதனால் சர்ச்சைகள் எழுப்பிய தரப்பினர் அமைதியாகினர்.
'ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை' அறிமுகம்:
நாளை இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில், 'ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை' இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரின் உருவங்களும், அவர்களின் கையொப்பங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இது இருபெரும் ஜாம்பவான்களின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்பதோடு, டெஸ்டில் அதிக ரன்கள் (15,921) எடுத்த சாதனையாளராகவும் திகழ்கிறார். ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை (704) எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை' அறிமுகம் குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசுகையில், "சச்சின் மற்றும் எனது பெயரில் இந்த புகழ்பெற்ற தொடர் அழைக்கப்படுவது எனக்கும் என் குடும்பத்திற்கும் பெருமையான தருணம். இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டி எப்போதும் சிறப்பு வாய்ந்தது" என்று தெரிவித்தார்.
சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், "டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு வாழ்வைக் கற்றுக்கொடுத்தது. அது சகிப்புத்தன்மை, ஒழுக்கம் மற்றும் சவால்களை எதிர்கொண்டு மீண்டு வரும் திறனைக் கற்றுக்கொடுத்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் முக்கிய பங்காற்றியுள்ளன. இப்போது நான் என் போட்டியாளரும், களத்திற்கு வெளியே ஒரு ஜென்டில்மேனுமான ஜேம்ஸுடன் இந்த அங்கீகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டின் சாரத்தை இன்னும் அதிகமாக இந்த உலகம் கொண்டாடும் என்று நம்புகிறேன்." என்றார்.
பட்டோடி குடும்பத்தின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் வகையில், இந்தத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 'பட்டோடி சிறந்த வீரர் பதக்கம்' (Pataudi Medal of Excellence) வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைக்கான முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது.
இங்கிலாந்தில் விளையாடப்படும் போது 'பட்டோடி கோப்பை' என்றும், இந்தியாவில் விளையாடப்படும் போது 'அந்தோணி டி மெல்லோ கோப்பை' என்றும் அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பெயர் மாற்றத்தால் எழுந்த சர்ச்சை:
பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியான போது, பட்டோடி-யின் புகழை மங்கச்செய்யும் நடவடிக்கை என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும் (ECB), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (BCCI) இதுக்குறித்து கூறுகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு நாடுகளின் தலைசிறந்த வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை கெளரவிக்கும் வகையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.
சச்சினும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பெயர் குறித்த சர்ச்சைகள் எழுந்த போது, “பட்டோடி குடும்பத்தின் இந்திய கிரிக்கெட்டுக்கான பங்களிப்பு மீது தனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. பட்டோடி பெயர் இரு நாடுகளுக்கிடையேயான டெஸ்ட் தொடருடன், தொடர்புடையதாக இருப்பதை உறுதி செய்ய பிசிசிஐ மற்றும் ECB(இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்) ஆகியவற்றுடன் கோரிக்கை விடுத்துள்ளேன்” என தெரிவித்திருந்தார். இதன் விளைவாக, பட்டோடி பெயரில் பதக்கம் வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இதனால் சர்ச்சைகள் எழுப்பிய தரப்பினர் அமைதியாகினர்.
'ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை' அறிமுகம்:
நாளை இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில், 'ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை' இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரின் உருவங்களும், அவர்களின் கையொப்பங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இது இருபெரும் ஜாம்பவான்களின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்பதோடு, டெஸ்டில் அதிக ரன்கள் (15,921) எடுத்த சாதனையாளராகவும் திகழ்கிறார். ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை (704) எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை' அறிமுகம் குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசுகையில், "சச்சின் மற்றும் எனது பெயரில் இந்த புகழ்பெற்ற தொடர் அழைக்கப்படுவது எனக்கும் என் குடும்பத்திற்கும் பெருமையான தருணம். இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டி எப்போதும் சிறப்பு வாய்ந்தது" என்று தெரிவித்தார்.
சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், "டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு வாழ்வைக் கற்றுக்கொடுத்தது. அது சகிப்புத்தன்மை, ஒழுக்கம் மற்றும் சவால்களை எதிர்கொண்டு மீண்டு வரும் திறனைக் கற்றுக்கொடுத்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் முக்கிய பங்காற்றியுள்ளன. இப்போது நான் என் போட்டியாளரும், களத்திற்கு வெளியே ஒரு ஜென்டில்மேனுமான ஜேம்ஸுடன் இந்த அங்கீகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டின் சாரத்தை இன்னும் அதிகமாக இந்த உலகம் கொண்டாடும் என்று நம்புகிறேன்." என்றார்.
பட்டோடி குடும்பத்தின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் வகையில், இந்தத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 'பட்டோடி சிறந்த வீரர் பதக்கம்' (Pataudi Medal of Excellence) வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைக்கான முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது.