ரோகித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த போது, யார் அடுத்த கேப்டன் என்கிற கேள்வி இந்திய அணியில் எழுந்தது. ரோகித் கேப்டனாக செயல்பட்ட போது, துணை கேப்டனாக இருந்த பும்ரா தான் இந்திய அணியினை அடுத்து வழிநடத்தப் போகும் கேப்டன் பதவிக்கு முதல் தேர்வாக இருந்துள்ளது. ஆனால், தனது பணிச்சுமை காரணமாக கேப்டன் பதவியை நிராகரித்ததாக பும்ரா வெளிப்படையாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு இந்தியாவின் ஸ்டார் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா பேட்டி ஒன்று வழங்கியுள்ளார். அதில் பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். மே மாதம் ரோகித் ஷர்மா, அதனைத் தொடர்ந்து விராட் கோலி என இரு பெரும் ஜாம்பாவான்களும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட இருந்த நிலையில் ரோகித் தன் ஓய்வு முடிவை அறிவித்தார். இதனால், யார் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்கிற கேள்வி எழுந்தது. கேப்டன் ரேஸில் பும்ரா, கில், பந்த், ஜடேஜா பெயர்களும் அடிபட்டன. இந்நிலையில், இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ.
கேப்டன் பதவியினை விட அணிதான் முக்கியம்:
பும்ரா ஏன் கேப்டனாக நியமிக்கப்படவில்லை? என்கிற கேள்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் எழுந்தது. கேப்டன் பதவி குறித்து பும்ராவிடம் நேரடியாக கேள்வி கேட்கப்பட்ட நிலையில், பும்ரா வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளார். பும்ரா கூறுகையில், “கேப்டன் பதவியில் எந்த ஆடம்பரமான விஷயங்களும் இல்லை. இதில் தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுகின்றன. உங்களுக்கே தெரியும் எனது முதுகு தண்டுவட பிரச்னையினால் ஐசிசி தொடர்கள் கூட விளையாடமல் இருந்திருக்கேன்.
ரோகித் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே, எனது பணிச்சுமை குறித்து பிசிசிஐயிடம் விவாதித்துள்ளேன். எனது மருத்துவர் உங்கள் உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். இந்த விஷயத்தில் கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள் என குறிப்பிட்டார். கேப்டன் குறித்த கேள்வி எழுந்தப்போது பிசிசிஐ-யின் முதல் தேர்வாக நான் தான் இருந்தேன். ஆனால், அதை நிராகரிக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு இருந்தது. காரணம், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் என்னால் முழுமையாக கேப்டனாக பொறுப்பு வகிக்க முடியாது. மூன்று போட்டிகளுக்கு நான் கேப்டனாகவும், 2 போட்டிகளுக்கு மற்ற நபர் கேப்டனாகவும் செயல்படுவது அணிக்கு நியாயமாக இருக்காது. நான் எப்போதும் அணியை முதலிடத்தில் வைக்க விரும்புகிறேன்” என பதிலளித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்ட போதே, “பும்ரா எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்பதை தற்போது கூற இயலாது” என வெளிப்படையாக கூறியது தேர்வுக்குழு.
31 வயதான பும்ரா, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் சிட்னியில் நடந்த கடைசி பார்டர்-கவாஸ்கர் டெஸ்டின் போது, பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இந்தத் தொடரில் பும்ராவிற்கு பணிச்சுமை அதிகளவில் இருந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 9 இன்னிங்ஸில் 152.1 ஓவர்கள் பந்துவீசி 32 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். இந்த தொடரில் ஏற்பட்ட பிரச்னையால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் 2025-ல் தொடக்க போட்டிகள் சிலவற்றில் பும்ரா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உடல்நலத்துடன் நல்ல நிலைமையில் இருந்தாலும், நீண்ட நாட்கள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால் தனது பணிச்சுமையினை குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் பும்ரா இருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.
ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு இந்தியாவின் ஸ்டார் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா பேட்டி ஒன்று வழங்கியுள்ளார். அதில் பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். மே மாதம் ரோகித் ஷர்மா, அதனைத் தொடர்ந்து விராட் கோலி என இரு பெரும் ஜாம்பாவான்களும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட இருந்த நிலையில் ரோகித் தன் ஓய்வு முடிவை அறிவித்தார். இதனால், யார் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்கிற கேள்வி எழுந்தது. கேப்டன் ரேஸில் பும்ரா, கில், பந்த், ஜடேஜா பெயர்களும் அடிபட்டன. இந்நிலையில், இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ.
கேப்டன் பதவியினை விட அணிதான் முக்கியம்:
பும்ரா ஏன் கேப்டனாக நியமிக்கப்படவில்லை? என்கிற கேள்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் எழுந்தது. கேப்டன் பதவி குறித்து பும்ராவிடம் நேரடியாக கேள்வி கேட்கப்பட்ட நிலையில், பும்ரா வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளார். பும்ரா கூறுகையில், “கேப்டன் பதவியில் எந்த ஆடம்பரமான விஷயங்களும் இல்லை. இதில் தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுகின்றன. உங்களுக்கே தெரியும் எனது முதுகு தண்டுவட பிரச்னையினால் ஐசிசி தொடர்கள் கூட விளையாடமல் இருந்திருக்கேன்.
ரோகித் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே, எனது பணிச்சுமை குறித்து பிசிசிஐயிடம் விவாதித்துள்ளேன். எனது மருத்துவர் உங்கள் உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். இந்த விஷயத்தில் கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள் என குறிப்பிட்டார். கேப்டன் குறித்த கேள்வி எழுந்தப்போது பிசிசிஐ-யின் முதல் தேர்வாக நான் தான் இருந்தேன். ஆனால், அதை நிராகரிக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு இருந்தது. காரணம், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் என்னால் முழுமையாக கேப்டனாக பொறுப்பு வகிக்க முடியாது. மூன்று போட்டிகளுக்கு நான் கேப்டனாகவும், 2 போட்டிகளுக்கு மற்ற நபர் கேப்டனாகவும் செயல்படுவது அணிக்கு நியாயமாக இருக்காது. நான் எப்போதும் அணியை முதலிடத்தில் வைக்க விரும்புகிறேன்” என பதிலளித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்ட போதே, “பும்ரா எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்பதை தற்போது கூற இயலாது” என வெளிப்படையாக கூறியது தேர்வுக்குழு.
31 வயதான பும்ரா, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் சிட்னியில் நடந்த கடைசி பார்டர்-கவாஸ்கர் டெஸ்டின் போது, பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இந்தத் தொடரில் பும்ராவிற்கு பணிச்சுமை அதிகளவில் இருந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 9 இன்னிங்ஸில் 152.1 ஓவர்கள் பந்துவீசி 32 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். இந்த தொடரில் ஏற்பட்ட பிரச்னையால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் 2025-ல் தொடக்க போட்டிகள் சிலவற்றில் பும்ரா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உடல்நலத்துடன் நல்ல நிலைமையில் இருந்தாலும், நீண்ட நாட்கள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால் தனது பணிச்சுமையினை குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் பும்ரா இருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.