Paris Diamond League: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் முகமாக விளங்கும் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, 2025 ஆம் ஆண்டில் தனது முதல் பெரிய பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். பாரிஸ் டைமண்ட் லீக்கில் பலம் வாய்ந்த ஜெர்மனியின் ஜூலியன் வெபரை பின்னுக்குத்தள்ளி நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் முதல் டைட்டில்:
பாரிஸில் நடைபெற்ற பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில், நீரஜ் சோப்ரா தனது முதல் சுற்றில் 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார். ஈட்டி எறிதலில் உலகின் முதல் நிலை வீரரான ஜெர்மனியின் ஜூலியன் வெபர் தனது முதல் சுற்றில் 87.88 மீட்டர் தூரத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் 85.10 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார் நீரஜ் சோப்ரா. இப்போட்டியில், நீரஸ் சோப்ராவிற்கு கடும் சவாலாக விளங்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஜூலியன் வெபர் தனது இரண்டாவது முயற்சியில், 86.20 மீட்டர் தூரம் மட்டுமே வீசினார்.
முதல் இரண்டு சுற்று முடிவிலேயே, முதல் இடத்திற்கான ரேஸில் நீரஜ் சோப்ரா மற்றும் ஜூலியன் வெபர் தான் முன்னிலையில் இருந்தனர். 3,4,5 என அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து பவுல் ஆகினார் நீரஜ் சோப்ரா. இதனால், இந்திய ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். மறுபுறம் ஜூலியன் வெபரால் இறுதி வரை நீரஸ் சோப்ராவினை விட அதிக தூரம் வீச முடியாமல் போனது.
இறுதியில் தனது முதல் முயற்சியில் வீசிய 88.16 மீட்டர் தூரத்துடன் முதல் இடத்தை பிடித்து பாரிஸ் டைமண்ட் லீக் டைட்டிலை வென்றார் நீரஜ் சோப்ரா. ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.88 மீட்டர் தூரத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்தார். பிரேசிலின் லூயிஸ் மாரிசியோ டா சில்வா 86.62 மீட்டர் தூரத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்தார்.
நீரஜ் சோப்ரா பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில் வென்றது மிக முக்கியமான வெற்றியாக கருதப்படுகிறது. காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் வென்ற முதல் டைமண்ட் லீக் பட்டம் இதுவாகும். கடந்த மாதம் (மே 2025) டோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில், நீரஜ் சோப்ரா 90 மீட்டருக்கு மேல் வீச வேண்டும் என்கிற தனது நீண்டகால கனவை நிறைவேற்றினார். 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தது அவரது தனிப்பட்ட சிறந்த ஈட்டி எறிதல் ஆகும். இருப்பினும், அந்தப் போட்டியில் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து நீரஜை முந்தினார்.
பாரிஸ் டைமண்ட் லீக் போட்டிக்கு முன்னதாக, மே 23 அன்று போலந்தில் நடந்த ஜானஸ் குசோசின்ஸ்கி நினைவுப் போட்டியில் ஈரப்பதமான சூழ்நிலைகள் காரணமாக நீரஜ் சோப்ரா 84.14 மீட்டர் மட்டுமே எறிய முடிந்தது. இருப்பினும் அந்த போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார். டைட்டிலை வெல்வது தொடர்ந்து மிஸ் ஆகி வந்த நிலையில், பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில் தனது முதல் த்ரோவிலேயே வலுவான தொடக்கத்தை அளித்து, இந்திய ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
டைமண்ட் லீக் சாம்பியன்ஸிப் இறுதிப்போட்டி எப்போது?
டைமண்ட் லீக் போட்டிகளில் பதக்கங்கள் வழங்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கு அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப புள்ளிகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. 14 டைமண்ட் லீக் தொடர்களின் நிறைவில் வீரர்கள் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் தடகள வீரர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, டைமண்ட் லீக் சாம்பியன்ஷிப்பிற்காகப் போட்டியிடுவார்கள்.
பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியானது, டைமண்ட் தொடர் 2025-வது சீசனின் எட்டாவது போட்டியாகும். நடப்பு சீசன் வருகிற ஆகஸ்ட் மாதம் சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் நடைபெறும் இரண்டு நாள் இறுதிப் போட்டியுடன் (ஆக 27 & 28) நிறைவடைய உள்ள நிலையில், இந்த வெற்றி நீரஜ் சோப்ராவுக்கு மேலும் உத்வேகத்தை அளிப்பதுடன், எதிர்வரும் போட்டிகளில் அவரது நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் டைட்டில் வென்றுள்ள நீரஜ் சோப்ராவிற்கு சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
2025 ஆம் ஆண்டில் முதல் டைட்டில்:
பாரிஸில் நடைபெற்ற பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில், நீரஜ் சோப்ரா தனது முதல் சுற்றில் 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார். ஈட்டி எறிதலில் உலகின் முதல் நிலை வீரரான ஜெர்மனியின் ஜூலியன் வெபர் தனது முதல் சுற்றில் 87.88 மீட்டர் தூரத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் 85.10 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார் நீரஜ் சோப்ரா. இப்போட்டியில், நீரஸ் சோப்ராவிற்கு கடும் சவாலாக விளங்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஜூலியன் வெபர் தனது இரண்டாவது முயற்சியில், 86.20 மீட்டர் தூரம் மட்டுமே வீசினார்.
முதல் இரண்டு சுற்று முடிவிலேயே, முதல் இடத்திற்கான ரேஸில் நீரஜ் சோப்ரா மற்றும் ஜூலியன் வெபர் தான் முன்னிலையில் இருந்தனர். 3,4,5 என அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து பவுல் ஆகினார் நீரஜ் சோப்ரா. இதனால், இந்திய ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். மறுபுறம் ஜூலியன் வெபரால் இறுதி வரை நீரஸ் சோப்ராவினை விட அதிக தூரம் வீச முடியாமல் போனது.
இறுதியில் தனது முதல் முயற்சியில் வீசிய 88.16 மீட்டர் தூரத்துடன் முதல் இடத்தை பிடித்து பாரிஸ் டைமண்ட் லீக் டைட்டிலை வென்றார் நீரஜ் சோப்ரா. ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.88 மீட்டர் தூரத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்தார். பிரேசிலின் லூயிஸ் மாரிசியோ டா சில்வா 86.62 மீட்டர் தூரத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்தார்.
நீரஜ் சோப்ரா பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில் வென்றது மிக முக்கியமான வெற்றியாக கருதப்படுகிறது. காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் வென்ற முதல் டைமண்ட் லீக் பட்டம் இதுவாகும். கடந்த மாதம் (மே 2025) டோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில், நீரஜ் சோப்ரா 90 மீட்டருக்கு மேல் வீச வேண்டும் என்கிற தனது நீண்டகால கனவை நிறைவேற்றினார். 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தது அவரது தனிப்பட்ட சிறந்த ஈட்டி எறிதல் ஆகும். இருப்பினும், அந்தப் போட்டியில் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து நீரஜை முந்தினார்.
பாரிஸ் டைமண்ட் லீக் போட்டிக்கு முன்னதாக, மே 23 அன்று போலந்தில் நடந்த ஜானஸ் குசோசின்ஸ்கி நினைவுப் போட்டியில் ஈரப்பதமான சூழ்நிலைகள் காரணமாக நீரஜ் சோப்ரா 84.14 மீட்டர் மட்டுமே எறிய முடிந்தது. இருப்பினும் அந்த போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார். டைட்டிலை வெல்வது தொடர்ந்து மிஸ் ஆகி வந்த நிலையில், பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில் தனது முதல் த்ரோவிலேயே வலுவான தொடக்கத்தை அளித்து, இந்திய ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
டைமண்ட் லீக் சாம்பியன்ஸிப் இறுதிப்போட்டி எப்போது?
டைமண்ட் லீக் போட்டிகளில் பதக்கங்கள் வழங்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கு அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப புள்ளிகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. 14 டைமண்ட் லீக் தொடர்களின் நிறைவில் வீரர்கள் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் தடகள வீரர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, டைமண்ட் லீக் சாம்பியன்ஷிப்பிற்காகப் போட்டியிடுவார்கள்.
பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியானது, டைமண்ட் தொடர் 2025-வது சீசனின் எட்டாவது போட்டியாகும். நடப்பு சீசன் வருகிற ஆகஸ்ட் மாதம் சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் நடைபெறும் இரண்டு நாள் இறுதிப் போட்டியுடன் (ஆக 27 & 28) நிறைவடைய உள்ள நிலையில், இந்த வெற்றி நீரஜ் சோப்ராவுக்கு மேலும் உத்வேகத்தை அளிப்பதுடன், எதிர்வரும் போட்டிகளில் அவரது நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் டைட்டில் வென்றுள்ள நீரஜ் சோப்ராவிற்கு சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.