கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் குமரி அறிவியல் பேரவை சார்பில் இளம் விஞ்ஞானிகளுக்கான சிறப்பு பயிலரங்கம் குமரி அறிவியல் பேரவை தலைவர் முள்ளஞ்சேரி வேலையன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “‘ககன்யான்’ என்ற ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம். இந்த திட்டத்தின்படி, இந்தியர் ஒருவரை ஏ.ஓ.ஜி. முறைப்படி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி, அவரை அங்கே பாதுகாப்பாக வைத்திருந்து, மீண்டும் அவரை பூமிக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இவர்களைப் பாதுகாப்பாக தரையறுக்குவது பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் நடைபெறுகிறது. இந்த திட்டத்தை 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
அப்போது இந்த திட்டத்துக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது, தற்போது ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட் அனுப்பப்படவுள்ளது. தொடர்ந்து இதுபோல 2 ராக்கெட்கள் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்படும். 2027 ஆம் ஆண்டு மனிதருடன் ராக்கெட் அனுப்பப்படும்.
ஏஐ (AI) தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுக்கூடங்களை இஸ்ரோ சார்பிலும் அமைத்துள்ளோம். இது மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்புவது குறித்தும் பிரதமர் அறிவித்துள்ளார். நிலவில் ராக்கெட்டை இறக்குவது எளிதான விஷயம் கிடையாது. நம்மிடம் இருக்கும் மார்க்-3 ராக்கெட் பத்தாயிரம் கிலோ எடையைத்தான் கொண்டு செல்லும். நிலவில் ராக்கெட்டை இறக்க வேண்டும் என்றால் 125 டன் எடையைக் கொண்டு செல்ல வேண்டும்.
சந்திரயானை நிலவுக்கு அனுப்பியபோது, நிலவைச் சுற்றி வரத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், “நிலவில் நம்முடைய தேசியக் கொடியை நாட்டி விட்டு வாருங்கள்” என்றார். அப்படியே, நிலவில் தேசியக் கொடியை நாட்டினோம். வருங்காலத்தில் நிலவில் நிலம் விற்பனை நடக்கும் என்றால், இந்தியாவுக்கு அதிக இடம் கிடைக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “‘ககன்யான்’ என்ற ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம். இந்த திட்டத்தின்படி, இந்தியர் ஒருவரை ஏ.ஓ.ஜி. முறைப்படி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி, அவரை அங்கே பாதுகாப்பாக வைத்திருந்து, மீண்டும் அவரை பூமிக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இவர்களைப் பாதுகாப்பாக தரையறுக்குவது பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் நடைபெறுகிறது. இந்த திட்டத்தை 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
அப்போது இந்த திட்டத்துக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது, தற்போது ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட் அனுப்பப்படவுள்ளது. தொடர்ந்து இதுபோல 2 ராக்கெட்கள் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்படும். 2027 ஆம் ஆண்டு மனிதருடன் ராக்கெட் அனுப்பப்படும்.
ஏஐ (AI) தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுக்கூடங்களை இஸ்ரோ சார்பிலும் அமைத்துள்ளோம். இது மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்புவது குறித்தும் பிரதமர் அறிவித்துள்ளார். நிலவில் ராக்கெட்டை இறக்குவது எளிதான விஷயம் கிடையாது. நம்மிடம் இருக்கும் மார்க்-3 ராக்கெட் பத்தாயிரம் கிலோ எடையைத்தான் கொண்டு செல்லும். நிலவில் ராக்கெட்டை இறக்க வேண்டும் என்றால் 125 டன் எடையைக் கொண்டு செல்ல வேண்டும்.
சந்திரயானை நிலவுக்கு அனுப்பியபோது, நிலவைச் சுற்றி வரத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், “நிலவில் நம்முடைய தேசியக் கொடியை நாட்டி விட்டு வாருங்கள்” என்றார். அப்படியே, நிலவில் தேசியக் கொடியை நாட்டினோம். வருங்காலத்தில் நிலவில் நிலம் விற்பனை நடக்கும் என்றால், இந்தியாவுக்கு அதிக இடம் கிடைக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.