K U M U D A M   N E W S

தமிழ்நாடு

“குதிரை பேரமா? ஒட்டக பேரமா?”... மதிமுக விலகல் குறித்து வைகோ ஆவேசம்!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் குறித்து வைகோ கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பணி நிரந்தரம் இல்லாத வேதனை... மாநகராட்சி ஊழியர் த்ற்கொலை !

10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சியில் தினக்கூலி ஊழியராக பணியாற்றிய சாமுவேலின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணி நிரந்தரம் இல்லாத வேதனை, கடன் சுமை குறித்து அவர் பதிவு செய்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாக்யராஜ் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

TN Weather: சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதியுடன் ஐடி கார்டு? செங்கோட்டையன் பேச்சு சர்ச்சை !

அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள்... சிபிசிஐடி விசாரணை கோரி சிபிஎம் வலியுறுத்தல்!

கோவை ஈஷா யோகா மையத்தில் அண்மையில் நடந்த இரண்டு மரணங்கள் மற்றும் கடந்த காலத்தில் ஏற்பட்ட மர்ம மரணங்கள் குறித்து தீவிரமான சந்தேகங்கள் எழுந்துள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ரூ.284 கோடி டெண்டர்கள் ரத்து... முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு!

சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை அமைக்கும் டெண்டர்களை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக அரசின் முதல் பட்ஜெட்... அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை!

தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி கிழக்கில் போட்டியா? மனம் திறந்து பேசிய ஸ்டாலின்..

திருச்சி கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முதல் முறையாக பதிலளித்த மு.க. ஸ்டாலின், "இன்னும் முடிவு செய்யவில்லை" என தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

அமோனியா வாயு கசிவு விபத்தில், சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் தொழிலாளர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.