K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!

மைசூரு-காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 மற்றும் 17ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (06295) மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரு வந்தடையும்.

'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.38 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பி.எப், கிராஜுவிட்டி மற்றும் விடுப்பு சம்பளம் உள்ளிட்ட ஓய்வூதிய பணப் பலன்கள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. ஓய்வூதிய பணப் பலன்களை வழங்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.

விஸ்வரூபம் எடுத்த சிலை கடத்தல் வழக்கு.. சிபிஐ வளையத்திற்குள் பொன் மாணிக்கவேல்...

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து பல்வேறு சிலைகளை கண்டுபிடித்ததற்காக சென்னை உயர் நீதிமன்ற பாராட்டை பெற்ற ஓய்வு பெற்றவர் ஐஜி பொன் மாணிக்கவேல், மீது டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கா?.. நியாயமான குரல்களை நசுக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தாய்ப்பால் கொடுத்த கையோடு பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி சென்ற தாய்..

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவமனை அருகே சாலையோர கடையில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதி இல்லை.. ஆளுநர் நிகழ்ச்சியில் அதிர்ச்சி

கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கருப்புச் சட்டை அணிந்த மாணவர்கள், மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Pondicherry Rain: புதுச்சேரியில் அடித்து நொறுக்கிய கனமழை... கரைபுரண்டோடிய வெள்ளம்... மக்கள் அவதி!

புதுவையில் நள்ளிரவு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Vijayakanth: “வாழ்ந்தார் மக்களுக்காக வாழ்ந்தார்.” கோயில் போல வடிவமைக்கப்பட்ட விஜயகாந்த் நினைவிடம்!

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடம் கோயில் போல வடிவமைக்கப்பட்டுள்ளது, ரசிகர்களிடமும் தேமுதிக தொண்டர்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ரவுடி நாகேந்திரன் சிறையில் ரகளை.. கெயெழுத்து போட மறுத்து வாக்குவாதம்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தையும், வேலூர் மத்திய சிறையில் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருக்கும் வடசென்னை ரவுடியுமான நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

“ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டும்... அரசுக்கும் காவல்துறைக்கும் பயம்..” பா ரஞ்சித் அதிரடி!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும், இதன் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆம்ஸ்ட்ராங் நெருங்கிய நண்பர்.. கருத்து வேறுபாடு இல்லை.. பால் கனகராஜ் விளக்கம்

ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் நானும் ஆம்ஸ்ட்ராங்கும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தோம் என்று பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ஐநாவில் பேச வைப்போம் - கொந்தளித்த மாநில தலைவர்

இன்னும் 10 நாட்களில் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ஐநாவிலும், பாராளுமன்றத்திலும் நான் பேசவைக்க உள்ளேன் என்று பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா?.. சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து..

77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? என்று கூறிய நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தனர்.

ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட இல்லை... இதுக்கு இப்போ அவசியம் தானா? - சீமான் காட்டம்

ஒலிம்பிக்கில் ஒரே ஒரு பதக்கம் வெல்லும் அளவிற்குத் தகுதியான ஒரு வீரரைக்கூட தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கத் திறனற்ற திமுக அரசு, மகிழுந்து பந்தயம் நடத்துவதால் விளையாட்டுத்துறை மேம்பட்டு விடுமா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை; மீண்டும் முடங்கிய மலை ரயில் போக்குவரத்து!

தொடர் மழை காரணமாக பிரபல ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு; பயணிகளுக்கு புதிய விதிமுறைகள்!

ஆகஸ்ட் 15ம் தேதி 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

செரிமானக் கோளாறுகளுக்கு நிரந்தர தீர்வு; புரோபயாடிக் உணவுகள் தரும் சொல்யூஷன்!

உங்களது குடலுக்கு சரியான புரோபயாடிக் உணவைத் தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமான குடலை பராமரிக்க சிறந்த உத்தியாகும். புரோபயாடிக் நிறைந்த உணவுகள் குறித்து கீழே பார்க்கலாம்.

நெல்லிக்காய் ஜூஸ்.. வெறும் வயிற்றில் குடித்தால் நடக்கும் அற்புதங்கள்!

நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்திற்கும் உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஊக்குவிக்கும் நெல்லிக்காய் ஜூஸ் முடி வளர்ச்சியை பலப்படுத்துகிறது மற்றும் கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது.

இலங்கை சிறையில் தூத்துக்குடி மீனவர்கள்; கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்துள்ளனர்.

Breaking: தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து அதிரடி... மேலும் 32 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழக காவல்துறையில் ஒரேநாளில் 58 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலில் 24 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து மேலும் 32 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Breaking: சென்னை மாநகர பேருந்தில் பட்டா கத்தியுடன் மாணவர்கள் அராஜகம்... சுத்துப் போட்ட போலீஸார்!

சென்னையில் பட்டாக் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

இடி, மின்னலுடன் மழை! 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. யாருக்கு குடை அவசியம்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 8) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேர்களைத் தேடி தமிழகம் வந்த வெளிநாட்டவர்கள்.. தஞ்சை கல்லணையை பார்த்து பரவசம்

“தஞ்சை பெரிய கோயிலில் காலடி வைத்த உடன் உடலில் ஒரு வைப்ரேஷன் வந்தது” என தமிழ்நாடு அரசின் ‘வேர்களை தேடி’ திட்டத்தின் கீழ் கல்லணைக்கு வந்த கனடாவில் வசித்து வரும் தமிழ் பூர்வகுடி பெண் உற்சாகம் தெரிவித்துள்ளார்.