K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தர்பூசணி பழத்தில் ரசாயனம் இல்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குட்கா முறைகேடு வழக்கு.. சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் பென்-ரைவ் மூலம் வழங்கிய கூடுதல் குற்றபத்திரிகையில் பல தகவல் இல்லை என்பது தொடர்பான புகாருக்கு பதில் அளிக்க வேண்டும் என சிபிஐ-க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமானுக்கு எதிரான வழக்கு..வீடியோ ஆதாரங்களை பார்த்த பிறகு உத்தரவு- சென்னை உயர்நீதிமன்றம்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமானுக்கு எதிராக தொடரபட்ட வழக்கில், சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு கொட்டப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை!

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு வீசப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், தடயங்களை சேகரித்தனர்.

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. கே.என்.ரவிச்சந்திரனிடம் ED விசாரணை

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆஜரானார். அவரிடம், TVH நிறுவனத்தில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இருட்டு கடையை வரதட்சணையாக கேட்ட மருமகன்.. முதலமைச்சர் தனிப்பிரிவில் பரபரப்பு புகார்

இருட்டு கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்காவின் கணவர் அக்கடையை வரதட்சணையாக கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திடீரென பெய்த கனமழை.. நீண்ட நேரமாக வானில் வட்டமடிக்கும் விமானங்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.

சவுக்கு சங்கர் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai Rains: 10 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்.. சென்னை கனமழை குறித்து வெதர்மேன் ட்வீட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையின் நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

தாய்ப்பால் ஊட்டிய போது நேர்ந்த சோகம்.. 4 மாத குழந்தை உயிரிழப்பு

4 மாத ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியபோது, மூச்சுத் திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ராஜமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold price today: 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை ஏற்றம்.. இன்றைய நிலவரம்

தங்கத்தின் விலை ஒருபக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று 20 காசுகள் அதிகரித்துள்ளது.

இனி தமிழ் மொழியில் மட்டுமே அரசாணை- தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்டிஓ வீட்டில் கத்தி முனையில் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்- மேலும் 3 பேர் கைது

கெங்கவல்லி அருகே ஆர்டிஓ வீட்டில் 60 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்சோ வழக்கு.. கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'சாட்டை'-க்கும் நாதகவுக்கும் தொடர்பில்லை’ - சீமான் அறிக்கை

"சாட்டை துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் பக்கத்திற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அதில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து; அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது” என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ED-க்கு நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரோட்டரி சார்பில் ”கோல்டன் ஸ்பேரோ”.. பெண்களே உங்கள் திறமையினை நிரூபிக்க சரியான மேடை

ரோட்டரி மாவட்டம்-3233 சார்பில் பெண்களின் திறமையை, அறிவை, சுதந்திரத்தை, பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நோக்கத்தோடு வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி கோல்டன் ஸ்பேரோ நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சரின் தம்பி வழக்கு... ED-க்கு உயர்நீதிமன்றம் க்ரீன் சிக்னல்!

தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் கே. என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வக்ஃபு நிலத்தில் ஆக்கிரமிப்பு? நடு ரோட்டில் நிற்கும் கிராமம்! பரிதவிக்கும் இந்து குடும்பங்கள்!

வேலூரில் உள்ள ஒரு கிராமத்தில் 150 இந்துக்குடும்பங்கள் வசிக்கும் வீடுகளை வக்ஃபு சொத்து எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள் ஆட்சியரை அணுகியுள்ளனர்.

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நயினாருக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்...அமைச்சரின் பதிலால் சிரிப்பலை

நயினார் நாகேந்திரன் பல மொழி புலவராகி, பழமொழி பேசிக்கொண்டிருக்கிறார்.இதை பார்க்கும் போது மாநிலத்தலைவராக இருந்து தேசிய தலைவராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்–பாஜக சார்பில் போலீசில் புகார்

பொன்முடி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தினை சார்ந்த 3 பேர் உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்

விருதுநகர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தினை சார்ந்த 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.