K U M U D A M   N E W S

தமிழ்நாடு

அதிமுகவின் தனபால், இன்பதுரை மாநிலங்களவையில் பதவியேற்பு!

அதிமுகவின் தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் இன்று பதவியேற்றனர்.

அவசரகால கதவை திறக்கமுயன்ற மாணவர்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து துர்காப்பூர் செல்லவிருந்த விமானத்தின் அவசரகால கதவைத் திறக்கமுயன்ற ஐஐடி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Rain Alert: தமிழகத்தில் ஆகஸ்ட் 2 வரை மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராஜேந்திர சோழனுக்கு சிலை.. கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் பிரதமருக்கு நன்றி!

அரியலூர் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனுக்கும் மிகப் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமத்தின் சார்பில் அதன் தலைவர் கோமகன் நன்றி தெரிவித்துள்ளார்.

அப்துல்காலம் போன்ற இளைஞர்கள் இந்தியாவிற்கு தேவை: பிரதமர் மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் முப்பெரும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை தேவை என்று கூறிய மோடி, 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ISIS அமைப்புடன் தமிழகத்தை சேர்ந்த நபருக்கு தொடர்பு.. NIA குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தினை சேர்ந்த நபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. படகு போக்குவரத்து நிறுத்தம்!

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், கரூர் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி.. பெருவுடையார் கோயிலில் சாமி தரிசனம்!

திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.

ஆயிரம் விளக்கு vs வியாசர்பாடி.. 'டிராபிக் ரேஸ்' அறிவிப்பால் பரபரப்பு!

சென்னையில் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் வழியாக 'டிராபிக் ரேஸ்' என்ற பெயரில் சட்டவிரோத பைக் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுநீர் கழித்த விவகாரம்.. காவலரை ஆபாசமாகப் பேசி மிரட்டும் வீடியோ வைரல்!

காவல் உதவி மைய சுவற்றில் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகராறில், சிறப்பு உதவி ஆய்வாளரை ஆபாசமாகப் பேசி மிரட்டும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.

கல்வி நிதி, மீனவர் வாழ்வாதாரம்.. பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்!

கல்விக்கான நிதி, ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ராஜேந்திர சோழன் நினைவு நாணயம்.. பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்!

முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் மோடி பங்கேற்று, நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை- பிரதமர் மோடி பேச்சு

“தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நெய்வேலியில் ‘இரிடியம்’ விற்பனை கும்பல் கைது.. 400 கோடி ரூபாய் பேரம்!

நெய்வேலியில், 400 கோடி ரூபாய்க்கு இரிடியம் விற்பனை செய்யப் பேரம் பேசிய கும்பலை போலீசார் மாறுவேடத்தில் சென்று கைது செய்துள்ளனர்.

Rain Alert: தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

நீலகிரி மாற்று கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருப்புப் பட்டியலில் 40 மருந்துகள்.. 3 நிறுவனங்கள்: TNMSC அதிரடி நடவடிக்கை!

தமிழக மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) தரமற்ற மருந்துகள் என 40 மருந்துகளையும், 3 மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் கருப்புப் பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டுள்ள சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை முதல் கிட்னி திருட்டு வரை .. எல்லா குற்றத்திலும் திமுகவிற்கு பங்கு: தமிழிசை பேட்டி!

தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கிட்னி திருட்டு அனைத்திலும் திமுகவினருக்கு பங்கு இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ்: அரசின் அலட்சியத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பூர், அவிநாசிரோடு டி.எஸ்.கே. பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி தாய் சேய் நல விடுதியில், மருத்துவ பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

தூத்துக்குடியின் அடையாளமாகத் திகழும் பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா இன்று கோலாகலமாகத் துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

தாயை சுட்ட மகன்.. சொத்து தகராறில் நடந்த விபரீதம்!

விருத்தாச்சலம் அருகே சொத்து தகராறில் தனது தாயினை சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில், 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இன்றிரவு திறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

கும்பகோணம் அருகே அதிர்ச்சி சம்பவம்.. மூதாட்டியை ஆற்றில் தள்ளிவிட்ட பெண்!

கும்பகோணம் அருகே தாயை ஆற்றில் தள்ளி கொள்ள முயன்ற மகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. மேற்கு வங்க வாலிபர் கைது!

திருவள்ளூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை? தாய் பரபரப்பு குற்றச்சாட்டு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், ராகிங் கொடுமையால் தனது மகன் தற்கொலை செய்துகொண்டதாக தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

மல்லை சத்யா மீது அவதூறு வழக்கு – மதிமுக வழக்கறிஞர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார்!

மதிமுக கட்சி, கட்சி தலைவர், கட்சி கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.