K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

8 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்.. பெண் உட்பட 2 பேர் கைது!

ஆப்பிரிக்கா, தாய்லாந்து நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புடைய கொக்கையின், கஞ்சா பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ஜாம்பியா நாட்டைச்சேர்ந்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயில் விதிகளை மீறிய நாடாளுமன்ற உறுப்பினர்-அமைச்சரின் மனைவி.. வைரலாகும் வீடியோ

காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் கோபுரத்தின் மீது புனித நீர் உற்றுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், அறநிலைத்துறை அமைச்சரின் மனைவி சாந்தி ஆகியோர் மேலே சென்ற சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்னை இல்லம் வீட்டில் உரிமை இல்லை.. ராம்குமார் பிரமாண பத்திரம் தாக்கல்

அன்னை இல்லம் வீட்டின் மீது தனக்கு தற்போது எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை என கூறி ராம்குமார் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

12 ஆண்டுகளுக்கு முன் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம்.. கே.என்.நேரு சகோதரிடம் அதிரடி விசாரணை

12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டம்:அதிமுக பங்கேற்காது- இபிஎஸ் அறிவிப்பு

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு நடத்தும் நாடகம் என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

காரை இயக்கிய சிறுவன்...தூக்கி வீசப்பட்ட இருவர்...அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் இயக்குவது, அலட்சியமாக செயல்பட்டு பிறருக்கு ஆபத்தை விளைவித்தல், மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்...தப்பியோடியபோது கை, காலில் எலும்பு முறிவு

பணம் பறிக்கும் நோக்கில் சென்று மூதாட்டியிடம் பணம்கேட்டு இல்லையென கூறிய நிலையில், மதுபோதையில் சபலத்தால் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கைது செய்யப்பட்ட நாகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிறந்தநாள் பேனர் கட்டிய 2 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி...சோகத்தில் கிராம மக்கள்

திருவண்ணாமலையில் நண்பர் பிறந்தநாளுக்கு வாழ்த்து பேனர் கட்டியபோது இந்த விபரீதம் நடந்துள்ளது.

திமுக அரசு சிலிண்டர் மானியம் வழங்கவில்லை- எல்.முருகன் குற்றச்சாட்டு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில் இதுவரை அந்த மானியத்தை திமுக அரசு வழங்கவில்லை என்று கூறினார்.

தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம்.. விவசாயிகள் கவலை!

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததல் விவசாயிகள் கவலை ஆழ்ந்துள்ளனர்.

மதுர குலுங்க...குலுங்க...மே12ம் தேதி கள்ளழகர் சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள்....அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு

வெப்பத்தை எதிர்கொள்ள போதுமான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்தார்.

பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜாமின்... காவல்துறை மனுவிற்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, சேலம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி, காவல் துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, துணைவேந்தர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா?- கேஸ் விலை உயர்வுக்கு விஜய் கண்டனம்

மத்திய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும்.

6 மாதத்திற்குள் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும்...சட்டப்பேரவையில் கே.என்.நேரு உறுதி

இன்னும் 6 மாதத்திற்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

கோவையில் முன்விரோதத்தால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்...4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

குனியமுத்தூர் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையில் எண்ட்ரி கொடுத்த இபிஎஸ்...எதிர்க்கட்சிகள் பேச அனுமதிப்பதில்லை என குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டிக்கக் கூடிய வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்

தொடரும் வேலை நிறுத்தம்.. வாழ்வாதாரத்திற்காக போராடும் விசைத்தறி தொழிலாளர்கள்!

விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விசைத்தறி தொழிலையே நம்பி உள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி வாழ்வாதாரத்திற்காக போரடுகின்றனர்.

அமைச்சர் கே.என். நேரு மற்றும் சகோதரர் வீடுகளில் 2-வது நாளாக தொடரும் ED ரெய்டு..!

அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், மற்றும் மகன் அருண் நேரு தொடர்புடைய இடங்களில் 2- வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. போதகர் ஜான் ஜெபராஜை தேடும் போலீஸார்

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்தவ மத போதகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கு.. சீமான் நேரில் ஆஜராக உத்தரவு

டிஐஜி வருண் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனோஜ் பாண்டியன் வைத்த கோரிக்கை – முதலமைச்சர் சொன்ன பதில்

உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என இந்த பேரவையில் தெரிவித்துக்கொள்கிறேன் என முதலமைச்சர் பதில் அளித்தார்.

டாஸ்மாக் முறைகேடு புகாரில் ஒன்றுமில்லை...இபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

டாஸ்மாக் முறைகேடு என்ற புகாரில் ஒன்றுமில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.

மோட்டார் சுவிட்சால் நெதர்லாந்திற்கு பறந்த தகவல்.. டெக்னாலஜியால் சிக்கிய கொள்ளையர்கள்

சென்னை மேற்கு மாம்பலத்தில் டெக்னாலஜியால் கொள்ளையர்கள் சிக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர்த் தளபதி சீமான் – அண்ணாமலை புகழாரம்

போர் களத்தில் நிற்க கூடிய தளபதி தான் சீமான், தான் கொண்டக்கொள்கையில் உறுதி கொண்டவர் என அண்ணாமலை புகழ்ந்து பேசியுள்ளார்.