K U M U D A M   N E W S

தமிழ்நாடு

காதலனுடன் சென்ற இளம்பெண் - காரை மறித்து பாசப்போராட்டம் நடத்திய பெற்றோர்

பெற்ற மகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் எனக் கூறி கார் செல்லவிடாமல் குறுக்கே படுத்துக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றோர்களின் பாச போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் நெருங்குவதால் தொழிலாளர்கள் மீது அக்கறை - செந்தில் பாலாஜியை சாடிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

காவிரி ஆற்றில் மணல் அள்ளுவது தினசரி நடந்து வரும் நிலையில் வருவாய் துறை, காவல் துறை, வனத்துறை என அனைத்து அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

மணல் கடத்தலை தட்டிக்கேட்டவருக்கு மண்வெட்டியால் வெட்டு - 3 பேர் கைது

மணல் கடத்தலை தட்டி கேட்ட நில உரிமையாளரை மண்வெட்டியால் வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவக் கல்வி சேர்க்கை.. போலிச் சான்றிதழ் பயன்படுத்திய 20 மாணவர்கள் கண்டுபிடிப்பு!

தமிழகத்தில் இளங்கலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் இதுவரை 20 விண்ணப்பதாரர்கள் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் கோஷ்டி மோதல்-ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ வைரல்

ராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

அரசு பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள்.. கதறவிட்ட ஓட்டுநர்

காமராஜர் பிறந்தநாள் விழாவின்போது, அரசுப் பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்களை, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று கீழே இறக்கிவிட்டார்.

பாஜகவின் கருத்துக்களை இபிஎஸ் பேச இதுதான் காரணம்...சீமான் விளக்கம்

2026க்கு பிறகும் இரண்டு ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் என்பதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கருத்துக்களை பேசி வருகிறார் என சீமான் கருத்து

75 வயது மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்-கோவையில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்

75 வயது மாமியாரை மருமகன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை- நாகாலாந்து இளைஞர் கைது

போதை மாத்திரைகளை விற்பனை செய்த நாகாலாந்து இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பு.. கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்கால தடை!

கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்கால தடை விதித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நதிநீர் பாதுகாப்பு நடவடிக்கை.. 8 வாரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் முழுமையாக அகற்றும்படி தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

POCSO வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

POCSO வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திருவில்லிபுத்தூர் குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

18 இடங்களில் வருமானவரி சோதனை.. தமிழகத்தில் ₹550 கோடி வருமான வரி மோசடி!

தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர் மிகப்பெரிய வருமான வரி மோசடி தொடர்பாக 18 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், சுமார் 550 கோடிவரை போலியாக வருமானவரி முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தரங்க வீடியோ விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்பு விசாரணை – காவல்துறையை கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம்!

பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க வீடியோ வெளியான விவகாரத்தில், அப்பெண்ணின் முன்பு ஆண் காவலர்கள் விசாரணை செய்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நகை திருட்டு வழக்கு - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

92 சவரன் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டசபைக்கு கூட வர முடியாது – தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

நடிகர் ரஜினிகாந்துக்கு நான் போன் செய்து பேசி விட்டேன்.ரொம்ப தேங்க்ஸ் சார், இப்போது மறக்காமல் பேசி இருக்கிறீர்கள் என்று அவரிடம் கூறினேன் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி

பிரதமர் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசில் பாஜகவினர் புகார்

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கமலாலயத்திற்கு வந்த கடிதம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர்.

குறை கூறுபவர்கள் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும்- அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்திய துணைக்கண்டத்தில் மக்களுக்கு சேவையாற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற சிறந்த திட்டம் ஏதாவது மாநிலத்தில் உள்ளதா என அரசை குறை கூறுபவர்கள் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அரசின் திட்டங்கள் நேரிடையாக பொதுமக்களின் இல்லங்களில்.. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அவர்கள் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்

அலட்சியத்தில் சுகாதாரத் துறை.. நிபா வைரஸ் பரவும் அபாயம்.. அச்சத்தில் கோவை மக்கள்!

கேரள மாநிலம், பாலக்காடு மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டு உள்ளதால், கேரள மாநிலம் முழுவதும் உஷார்ப்படுத்தப்பட்டு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த கலாச்சார வீடுகள்…வனத்துறையின் அலட்சியத்தால் ரூ.7 கோடி வீண்

ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த நிலையில் சூழல் கலாச்சார கிராம வீடுகள் வனத்துறையின் அலட்சியத்தால் வீணாகியுள்ளது.

திருவண்ணாமலையில் பாலத்தில் கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் பலி…3 பேர் படுகாயம்

பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இபிஎஸ் கேவலமான அரசியலை செய்து வருகிறார்- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

தேர்தல் பரப்புரையில் நான் பேசியதை தவறாக சித்தரித்து கேவலமான, கீழ்த்தரமான அரசியலை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் செய்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மக்களே ரெடியா இருங்க.. வெளுத்து வாங்கப்போகும் மழை..!

வட தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி முதல் மழையின் தீவிரம் கணிசமாக அதிகரிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல்…இளைஞர் கைது

சூலூர் அருகே பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல் அளித்து கொடூரமாக தாக்கிய இளைஞர் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.