K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி- திணறும் வனத்துறை அதிகாரிகள்!

நாங்குநேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை வனத்துறையினர் விரைந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

பல்கலைக்கழக கிளைகள் அமைக்கும் திட்டம்.. லண்டன் டைம்ஸ் உயர்கல்வி அமைப்புடன் ஒப்பந்தம்..!

அறிவுசார் நகரில் வெளிநாடுகளைச் சேர்ந்த சிறந்த பல்கலைக்கழகங்களின் கிளைகளை அமைப்பது தொடர்பாக, லண்டனைச் சேர்ந்த (Times Higher Education) என்ற அமைப்புடன் தொழில்துறை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளாடு வளர்ப்பில் பிசினஸ் பண்ண ஆசையா? சூப்பர் வாய்ப்பு காத்திருக்கு..

வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சியில் ஈடுபட விரும்புவோர் வருகிற 21.03.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Gold price: இறங்க மனமில்லாத தங்கம்- மீண்டும் விலை உயர்வு!

சென்னையில் இன்று 22 கேரட் மதிப்புக்கொண்ட ஒரு சவரன் ரூ.66,000 ஆக விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரன் ரூ.65,680 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் முற்றுகை.. பாஜகவினர் 1,250 பேர் மீது வழக்குப்பதிவு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1250  பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொடைரோட்டில் தம்பதிக்கு நேர்ந்த சோகம் - வீட்டில் இருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அம்மையநாயக்கனூர் போலீசார் கணவன்-மனைவி இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சென்னையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்- நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு

பாதிக்கப்பட்ட  சிறுமியின் தாய் தரப்பில் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஒரே இரவில் 15 செம்மறி ஆடு உயிரிழப்பு- அச்சத்தில் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பண்டசீமனூர் ஊராட்சியின் மந்த காளிக்கனூர் கிராமத்தில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செல்போனால் வந்த வினை...  இரண்டரை வயது சிறுவனுக்கு நேர்ந்த வேதனை

சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை முறையில்  அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவ குழுவினரை பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.

சென்னையில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு - காரணம் குறித்து போலீஸ் விசாரணை

மாணவி உயிரிழப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

திண்டுக்கல்லில் விரைவு ரயிலில் ரூ.13 லட்சம் பறிமுதல்.. வருமான வரித்துறையினர்  தீவிர விசாரணை

விரைவு ரயிலில் திண்டுக்கல்லில் நடந்த சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணம் இன்றி ரூ14 லட்சத்தை எடுத்துச் சென்ற நவநீதகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் எஸ். எஸ். சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறுதிக்கட்டத்தை எட்டிய அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்!

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

பட்டுக்கோட்டையில் ஏழு  சிறுவர் சிறுமியர்கள் 8 உலக சாதனை..!

பட்டுக்கோட்டையில் 7 சிறுவர், சிறுமியர்கள் உலக சாதனைப்படைத்த நிலையில், நோபல் நிறுவனத்திலிருந்து இவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தப்புமா சபாநாயகர் பதவி? அப்பாவு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய EPS

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு-வினை பதவி நீக்கக்கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தொடை நடுங்கி திமுக.. போலீஸ் வலையில் பாஜகவினர்- அண்ணாமலை கண்டனம்!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தொடைநடுங்கி திமுக அரசு என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

நள்ளிரவில் பயங்கரம்.. சென்னையில் இரட்டை கொலை..!

சென்னையில் நேற்று நள்ளிரவில் கோயில் வாசலில் படுத்திருந்த இரண்டு ரவுடிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி அருண் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோரை பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராம வங்கியில் கொள்ளை முயற்சி.. அலாரத்தால் தப்பிய கொள்ளையர்கள்..!

அருப்புக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அதிகாலை நேரத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியின் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. அப்போது வங்கியில் அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டா ரீல்ஸ்காக பைக் சாகசம்.. ஆபத்தை நோக்கி இளைஞர்கள்..!

சென்னையில் நாளுக்கு நாள் இளைஞர்களின் இருசக்கர வாகன ரேஸ் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீலிங் செய்வதை இன்ஸ்டாவில் ரீல்ஸ்-ஆக வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் நடந்து கொள்வது அவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது போன்று உள்ளது.

மொழிக் கொள்கையின் உறுதியைக் காட்டவே “ரூ” குறியீடு - முதலமைச்சர் விளக்கம்..!

தமிழ்நாடு சட்ட்ப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதில் தமிழ் எழுத்து ‘ரூ’-வை அச்சிட்டது ஏன் என்பது குறித்தும், பட்ஜெட் வெளியீட்டிற்கு பின்னர் வெளியான நிலவரம் குறித்தும் “இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்.. இன்று விவாதம்..!

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.

தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தல்.. கார் ஓட்டுனர் கைது..!

கோவையில் தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கடத்தப்பட்ட சிறுவனை காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

தமிழகத்தில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் - வேல்முருகன் பேட்டி

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது இருப்பினும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது அதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

சுட்டெரிக்கும் வெயில்.. வெப்பத்தை குறைக்க தண்ணீரை ஸ்ப்ரே செய்யும் நவீன மெஷின்..!

திருப்பூரில் வெப்பத்தை தணிக்கும் வகையில், பேக்கரியில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தண்ணீரை ஸ்ப்ரே செய்யும் கருவி பொருத்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரயிலில் நெல்லைக்கு 8 கிலோ கஞ்சா கடத்தல்.. போலீசார் விசாரணை..!

மதுரை ரயில் நிலையத்திற்குள் மேற்கு வங்காளத்தில் இருந்து நெல்லைக்கு 8 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற வந்த சிறுவன் உள்பட மூவர் மதுரை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.