K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம்..காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு!

தீபாவளியை விபத்தில்லாமல் கொண்டாட வலியுறுத்தி, காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வைச் செயல்முறை விளக்கத்துடன் வழங்கினர். பட்டாசுகளைப் பாதுகாப்பாகக் கொளுத்துவது, எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்துவது, மற்றும் பேரிடர் காலங்களில் மீளும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் கலைத் திருவிழா: மாணவர்களுடன் ஆசிரியர்களும் நடனம் ஆடி உற்சாகம்!

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

27 சவரன் நகை கொள்ளை.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

குமுதம் செய்தி எதிரொலி: திருவெள்ளறை பெருமாள் கோயில் சூப்பர்வைசர் சஸ்பெண்ட்!

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

உலக மனநல தினம்.. ஈஷா சார்பில் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி!

உலக மனநல தினத்தையொட்டி ஈஷா சார்பில் தமிழகமெங்கும் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல்கள்.. தரவுகள் தர மறுக்கும் மைக்ரோசாஃப்ட்!

வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் மெயில் ஐடிகள் குறித்த தரவுகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரமறுப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சிறையில் 30 தமிழர்கள்.. ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

இலங்கை மீனவர்களால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

தங்கத்தை போலவே எகிறும் வெள்ளி விலை.. புதிய உச்சம்!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது.

ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு.. இனிப்புக் கொடுத்து கொண்டாடிய எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு!

கோவை அவிநாசி சாலை மேம்பாலத் திறப்பைக் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.