K U M U D A M   N E W S

தமிழ்நாடு

தீர்ப்பு ஒகே.. யார் அந்த சாருக்கு பதில் எங்கே? EPS சூளுரை

”அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் மூலக் கேள்வியான யார் அந்த சாருக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமையும் போது அந்த SIR "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வயதான தாய்.. பெண் குழந்தை.. நீதிபதியிடம் மன்றாடிய குற்றவாளி ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ஆம் தேதி வழங்கபடும் என மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி அறிவித்துள்ளார்.

FIR லீக்.. திமுக முகம்.. அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு!

தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தீ விபத்து சம்பவம்.. தவெகவினரை போலீசார் தாக்கவில்லை என விளக்கம்!

தீ விபத்தால் வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கிய தவெக பெண் நிர்வாகியை ஷூவால் எட்டி உதைத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதுபோல எதுவும் நடக்கவில்லை என போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

விமான பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்.. கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!

கோவை விமான நிலையத்தில் ஒரு பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை: பாஜகவினர் கொட்டும் மழையில் பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் போர் வெற்றியை கொண்டாடும் வகையில் போரில் ஈடுபட்ட ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் நடிகை நமீதா கொட்டும் மழையில் தேசிய கொடியை ஏந்தி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.

செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு.. நாக்பூரில் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி விசாரணை..!

இந்தியாவில் இருந்து துபாய்க்கு செம்மரக்கட்டைகளை கடத்தும் முக்கிய நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் டீக்கடையில் ரகளை.. 5 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது!

மதுபோதையில் டீக்கடையில் புகுந்து மூன்று பேரை அடித்து ரகளையில் ஈடுபட்ட 5 சிறார்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்.. 4வது நாளாக கடலுக்கு செல்லாத நாட்டு படகு மீனவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், நாட்டு படகு மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தவெக பெண் நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல்.. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகனமழையினால் நீலகிரியில் ரெட் அலர்ட்.. சுற்றுலாத்தலங்கள் மூடல்..!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

துணை நடிகையுடன் சல்லாபம்.. கம்பி நீட்டிய கனடா என்ஜினீயருக்கு போலீசார் வலை

திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்து கொண்டு ஏமாற்றி விட்டதாக துணை நடிகை அளித்த புகாரை தொடர்ந்து கனடா நாட்டு சாப்ட்வேர் என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நுங்கு சாப்பிட அழைத்த சிறுவர்கள்.. டக்கென்று காரை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

’சார் வாங்க சார்.. நுங்கு சாப்பிட்டு போலாம்’, என அன்போடு சிறுவர்கள் அழைத்ததும், உடனே வாகனத்தை நிறுத்தி நுங்கு சாப்பிட்டுவிட்டு பொதுமக்களுக்கும் வாங்கி கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோடை மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது – அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டில் கோடை மழையால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது அரியலூரில் புதிய வழித்தடங்களில் மகளிர் கட்டணமில்லா பயணப் பேருந்துகளை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

’கும்பலாக சுத்துவோம்.. அய்யோ அம்மான்னு கத்தவோம்’.. ரேசில் ஈடுபட்ட இளசுகள் அதிரடி காட்டிய போலீஸ்

அண்ணாநகரில் இருந்து கும்பலாக அதிவேகமாக வாகனத்தை இயக்கிய விவகாரத்தில் பத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஒன்பது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வார இறுதியில், அதிவேகமாக வாகனத்தை இயக்கி ரீல்ஸ் வெளியிட ஓட்டியதாக இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

81 வயது மூதாட்டியை தங்க நகைக்காக கழுத்தை நெரித்த பெண்.. மயிலாப்பூரில் அதிர்ச்சி

சென்னை மயிலாப்பூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த 81 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து தங்க நகைகள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் கல்வி விருது விழா..!

10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தவெக சார்பில் வரும் 30ம் தேதி கல்வி விருது விழா நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்களில் கைவரிசை - 3 பேர் கைது!

சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்களில் வாடிக்கையாளர் பணத்தை முடக்கி நூதன முறையில் பணத்தை திருடிய உத்திரப்பிரேதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை என்றும், சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் என்று வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இன்றும் ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ள நிலையில் இன்றும், 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தை டார்கெட் செய்து லேசர் ஒளி.. பரபரப்பான சென்னை விமான நிலையம்

துபாயிலிருந்து சென்னைக்கு 326 பயணிகளுடன், தரையிறங்க வந்த விமானத்தினை டார்கெட் செய்து மர்மமான முறையில், லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வாய் புண்ணுக்கு சுன்னத் சிகிச்சை.. ஞாபக மறதியால் சர்சையில் சிக்கிய டாக்டர்

வாய் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு சுன்னத் சிகிச்சையினை மருத்துவர் மேற்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

குருவிகளுக்காக பைக்கை தானம் செய்த வினோத இளைஞன்

அலுவலகத்திற்கு செல்லும் பைக்கில் குருவி கூடு கட்டியிருப்பதை அறிந்து பைக்கை பயன்படுத்தாமல் குருவி குஞ்சு பறக்கும் வரை காத்திருக்கும் வினோத இளைஞரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டின் தம்பிகள் யார் என்று விளக்க வேண்டும் – எல்.முருகன்

சார்கள் பெண்களை சீரழித்து வருகின்றனர், தம்பிகள் பணத்தை சுரண்டி வருகின்றனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் மக்கள் நாளை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்

நீலகிரியில் நாளை சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.