ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் மாபெரும் இறுதி ஆட்டம் இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆசியக் கோப்பையில் முதல்முறை
ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் - பாகிஸ்தானும் முதன்முறையாக மோதுவது குறிப்பிடத்தக்கது. நடப்புத் தொடரில் இந்திய அணி தான் விளையாடிய 6 ஆட்டங்களிலும் வென்று உற்சாகத்துடன் களமிறங்குகிறது. ஆனால், பாகிஸ்தான் அணியோ ஏற்கெனவே இருமுறை இந்தியாவுடன் தோல்வியைச் சந்தித்து, பல சிக்கல்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணியின் பலம்
நடப்பு தொடரில் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளைத் திணறடிக்கச் செய்கிறார். நடுவரிசையில் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அணிக்குத் தேவையான ரன்களைச் சேர்க்க நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்துகின்றனர். பந்சுழற்பந்து வீச்சில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள குல்தீப் யாதவ், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக் கூடும். வருண் சக்ரவர்த்தியும் அணிக்குப் பலம் சேர்க்கக் கூடும்.
தாக்கத்தை ஏற்படுத்தாத சூர்யா குமார்
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யா குமார் யாதவ் நடப்பு தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் இத்தொடரில் ஒட்டுமொத்தமாக 71 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
பாகிஸ்தானின் பலவீனங்கள்
பாகிஸ்தான் அணியின் பேட்டிங், இத்தொடரில் சொல்லும்படி பெரிய அளவில் இல்லை. ஜஸ்பிரீத் பும்ராவுக்கு எதிராகத் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்ட சாஹிப்ஸாதா ஃபர்ஹானைத் தவிர, வேறு எந்த பேட்ஸ்மேன்களிடம் இருந்தும் பெரிய அளவிலான பங்களிப்பு வெளிப்படவில்லை. சைம் அயூப் 4 ஆட்டங்களில் 'டக் அவுட்' ஆகியுள்ளார். ஹூசைன் தலத், சல்மான் அலி ஆகா ஆகியோர் சுழற்பந்து வீச்சில் தடுமாறுவது பலவீனமாக உள்ளது. பஹர் ஸமானிடம் இருந்தும் எதிர்பார்த்த செயல் திறன் வெளிப்படவில்லை.
பந்துவீச்சை நம்பும் பாகிஸ்தான்
பேட்டிங்கில் தடுமாறும் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு திறனை பெரிதும் நம்பியுள்ளது. ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப் ஆகியோரின் வேகக்கூட்டணி இந்திய அணியின் தொடக்க வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியக் கோப்பையில் முதல்முறை
ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் - பாகிஸ்தானும் முதன்முறையாக மோதுவது குறிப்பிடத்தக்கது. நடப்புத் தொடரில் இந்திய அணி தான் விளையாடிய 6 ஆட்டங்களிலும் வென்று உற்சாகத்துடன் களமிறங்குகிறது. ஆனால், பாகிஸ்தான் அணியோ ஏற்கெனவே இருமுறை இந்தியாவுடன் தோல்வியைச் சந்தித்து, பல சிக்கல்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணியின் பலம்
நடப்பு தொடரில் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளைத் திணறடிக்கச் செய்கிறார். நடுவரிசையில் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அணிக்குத் தேவையான ரன்களைச் சேர்க்க நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்துகின்றனர். பந்சுழற்பந்து வீச்சில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள குல்தீப் யாதவ், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக் கூடும். வருண் சக்ரவர்த்தியும் அணிக்குப் பலம் சேர்க்கக் கூடும்.
தாக்கத்தை ஏற்படுத்தாத சூர்யா குமார்
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யா குமார் யாதவ் நடப்பு தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் இத்தொடரில் ஒட்டுமொத்தமாக 71 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
பாகிஸ்தானின் பலவீனங்கள்
பாகிஸ்தான் அணியின் பேட்டிங், இத்தொடரில் சொல்லும்படி பெரிய அளவில் இல்லை. ஜஸ்பிரீத் பும்ராவுக்கு எதிராகத் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்ட சாஹிப்ஸாதா ஃபர்ஹானைத் தவிர, வேறு எந்த பேட்ஸ்மேன்களிடம் இருந்தும் பெரிய அளவிலான பங்களிப்பு வெளிப்படவில்லை. சைம் அயூப் 4 ஆட்டங்களில் 'டக் அவுட்' ஆகியுள்ளார். ஹூசைன் தலத், சல்மான் அலி ஆகா ஆகியோர் சுழற்பந்து வீச்சில் தடுமாறுவது பலவீனமாக உள்ளது. பஹர் ஸமானிடம் இருந்தும் எதிர்பார்த்த செயல் திறன் வெளிப்படவில்லை.
பந்துவீச்சை நம்பும் பாகிஸ்தான்
பேட்டிங்கில் தடுமாறும் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு திறனை பெரிதும் நம்பியுள்ளது. ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப் ஆகியோரின் வேகக்கூட்டணி இந்திய அணியின் தொடக்க வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.