K U M U D A M   N E W S
Kumudam Ad

இந்தியா

சோனம் வாங்சுக் வழக்கு... டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லியில் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தினமும் கண்காணிக்கவும் அவரது உடல்நிலை மோசமடைந்தால் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 மாதங்களில் 19 மரணங்கள்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரசவத்தின் போது 19 தாய்மார்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

"நம்மள ஏமாத்திட்டாங்க சித்தப்பா.." மட்டனுக்குப் பதில் சிக்கன்.. கல்யாணத்தில் களேபரம்!

பீகாரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், மதிய உணவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்!

வயநாட்டில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் இடிந்து வீழ்ந்த கட்டிடம்.. 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாகப் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"அரசுக்கு எதிராக போராடினால் இப்படி தான் செய்வீர்களா?" காவல்துறையை விளாசிய உயர் நீதிமன்றம்!

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை: இரு நாட்டு பிரதமர்களுக்கும் முக்கியப் பிரமுகர்கள் கடிதம்!

இந்தியா - பாகிஸ்தான் உறவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர பிரதமர் மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புக்கும் இரு நாடுகளையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அருணாச்சலை புரட்டிப்போட்ட கனமழை... 3,000 பேர் தவிப்பு!

அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அசாமிலும் வெள்ள பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் ராஜபக்சேவுக்கு நெருக்கடி... இலங்கையில் மீண்டும் பரபரப்பு!

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சாலே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்கள், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் சட்ட நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதனால் இலங்கையில் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக மாற்றப் பணிக்கு கௌரவம்... ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது!

மும்பையில் நடைபெற்ற விழாவில் ரெக்கிட் நிறுவனத்தின் இயக்குநர் ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.