வீடியோ கான்பிரன்சில் விசாரணை இல்லை: முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
விஜய்யின் த.வெ.க வெற்றியால் சோர்ந்துள்ள ரஜினி ரசிகர்கள், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்திற்கு ஆதரவளிக்கத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் படம், பெயரை எந்த கட்சியே, அமைப்பே பயன்படுத்தக்கூடாது என ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது. இது அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து, ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யும் பொருட்டு முதலமைச்சர் விஜய் உளவு வளையத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பாஜக பிரமுகர் விஜயதரணி தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தே ர்தல் காலங்களில் மட்டுமின்றி அனைத்து காலங்களிலும் தி.மு.க.வுடன் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துவந்த இஸ்லாமிய கட்சிகளில் சில, த.வெ.க. அரசு அமைந்தவுடன் பாதை மாறத் தொடங்கியிருப்பதுதான் உடன்பிறப்புகளுக்கு ஷாக் குறிப்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆவேசமாக தி.மு.க. தலைமைக்கு எதிராக கொந்தளிப்பது இஸ்லாமியர்களையே புருவம் உயர்த்த வைத்துள்ளது!
எ ல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பதுபோல அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பெரும்பாலான மாஜிக்களும் பனையூரை நோக்கிச் செல்கிறார்கள். அப்படி சென்ற கடம்பூர் ராஜுவை, அவரது மாவட்ட அ.தி.மு.க.வினரே ரவுண்ட் கட்டி தாக்குகிறார்கள். 'கோவில்பட்டியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வாய்ப்பை கடம்பூர் ராஜுவுக்கு வழங்கிய அம்மாவின் ஆன்மா ஒரு காலமும் அவரை மன்னிக்காது' என்று கடுமையாக சாபம் விடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். கூடவே ராஜுவுக்கு எதிரான போராட்டங்களும் வலுத்திருக்கின்றன!
அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மக்களால் புறம் தள்ளப்பட்ட அரசியல் மகா நடிகன் என தவெக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மேகதாது பிரச்னை குறித்து முதல்வர் பேசாதது ஏன்? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.