K U M U D A M   N E W S

??????????

தொடர்ந்து 3 பவுல்.. ஆனாலும் டைட்டிலை வென்று அசத்திய நீரஜ் சோப்ரா!

Paris Diamond League: பாரிஸில் நடைபெற்ற பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில், நீரஜ் சோப்ரா தனது முதல் சுற்றில் 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததன் மூலம் 2025-ல் தனது முதல் டைட்டிலை வென்று அசத்தியுள்ளார் நீரஜ் சோப்ரா.

IND VS ENG: முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: வரலாற்றை மாற்றுமா இந்தியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இன்று (ஜூன் 20) தொடங்க்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது.

IND vs ENG: சர்ச்சைகளுக்கு மத்தியில் 'ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை' அறிமுகம்!

ஒருசில சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ‘ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை’ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேப்டன் பதவி வேண்டாம்னு நான் தான் சொன்னேன்: பும்ரா ஓபன் டாக்

’எனது பணிச்சுமையினை குறைத்து கொள்ள வேண்டும் என்கிற மருத்துவரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தான் கேப்டன் பதவியினை ஏற்கவில்லை’ என பும்ரா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

5 வருடத்திற்கு பிறகு மீண்டும் முதலிடம்.. ஸ்மிருதி மந்தனாவிற்கு குவியும் வாழ்த்து

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா, ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னையில் ஓபன் தொடர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சென்னையில் 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

WTC Final இந்தியாவில் நடத்த BCCI கோரிக்கை - ICC நிராகரிப்பு!

BCCI கோரிக்கை நிராகரிப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அடுத்த இறுதிப்போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என BCCI முன்வைத்த கோரிக்கையை ஜெய்ஷா தலைமையிலான ICC நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

IND vs PAK: மகளிர் உலகக் கோப்பை போட்டி.. அக்டோபர் 5ல் கொழும்புவில் இந்தியா - பாகிஸ்தான் பலபரீட்சை!

மகளிர் ODI உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5ஆம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.

T20 கிரிக்கெட்.. கோலியை பின்னுக்குத்தள்ளி பொல்லார்ட் புதிய சாதனை

அனைத்து வகையிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதியதொரு சாதனையினை படைத்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட், அதுவும் இந்தியாவின் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி.

என்னடா பண்றீங்க? அப்செட்டான அஸ்வின்.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்

தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 சீசனில், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஷ்வின் உட்பட அவரது அணி வீரர்கள் தெருவில் விளையாடும் கிரிக்கெட்டினை கண் முன்னே நிகழ்த்தி காட்டிய தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யார் இந்த பவுமா? டெஸ்ட் போட்டியில் தோல்வியே அறியாத வெற்றிக்கேப்டனின் கதை!

தென் ஆப்பிரிக்க அணியின் முதல் கருப்பினத்தை சேர்ந்த கேப்டன் பல்வேறு விமர்சனங்களை தாண்டி, 27 ஆண்டுகளுக்கு பிறகு தனது நாட்டின் ஏக்கத்தை நிறைவு செய்து, ஐசிசி-யின் கோப்பையை தன்னுடைய வெற்றிப்படையின் மூலம் கைப்பற்றி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

இனி இந்த கேட்ச்க்கு ‘SIX’ தான்.. அவுட் இல்லை என ரூல்ஸை மாற்றிய MCC.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

கடந்த சில வருடங்களாக பவுண்டரி லைன்களில் நிற்கும் பீல்டர்கள் ஸ்பைடர் மேன் போல், பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் பந்தை அந்தரத்தில் தட்டிவிட்டு, பின்னர் எல்லைக்குள் வந்து கேட்ச் பிடிப்பதை தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். இனிமே இந்த மாதிரி கேட்ச்களை பிடித்தால் அவுட் வழங்கபடாது என்று புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புதிய வரலாற்றை எழுதியது கேப்டன் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (2025)ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது கேப்டன் பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.

இப்படி கேட்ச் பிடித்தால் இனி சிக்ஸ்.. கிரிக்கெட் ரூல்ஸை மாற்றியது MCC!

பன்னி ஹாப் என அழைக்கப்படும் பவுண்டரி லைன் கேட்சுகளின் விதிகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்.

அதிரடி காட்டிய ஃபின் ஆலன்.. கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்து அசத்தல்

மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன், 19 சிக்ஸர்களை விளாசி கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்துள்ளார்.

TNPL: முன்னாள் CSK வீரர் பத்ரிநாத்தை கிண்டல் செய்த RCB ரசிகர்! வைரலாகும் வீடியோ

ஆர்சிபி ரசிகர் ஒருவர் TNPL போட்டியினை வர்ணணை செய்ய வருகைத் தந்த பத்ரிநாத்தை நோக்கி கிண்டலடித்தார். அதுத்தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

AUS vs SA : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங் தேர்வு..!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Nicholas Pooran: நீங்களுமா சார்? 29 வயதில் ஓய்வு முடிவை அறிவித்தார் நிக்கோலஸ் பூரன்

மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPL: பெண் நடுவருடன் வாக்குவாதம்- முகம் சுளிக்க வைத்த அஸ்வின்

நடைப்பெற்று வரும் TNPL தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின், தனக்கு அவுட் கொடுத்த பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கையுறையினை பெவிலியன் திசை நோக்கி தூக்கி எறிந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Piyush Chawla: ரியல் சுட்டிக்குழந்தை பியூஷ் சாவ்லா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!

இந்திய அணியின் ரியல் சுட்டிக் குழந்தை, சுழல் மாயாவி பியூஷ் சாவ்லா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

TNPL: வந்த வேகத்தில் கிளம்பிய அஸ்வின்.. திண்டுக்கல் அணிக்கு 150 ரன் இலக்கு

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 தொடரின் முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது லைகா கோவை கிங்ஸ்.

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்.. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் மோதல்

8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

துக்க நிகழ்வாக மாறிய RCB வெற்றி கொண்டாட்டம்: 10 பேர் உயிரிழப்பு

நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக, இன்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீரர்களை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏலத்தில் எடுக்காததால் விரக்தி.. கபடிக்கு குட்-பை சொன்ன பிரதீப் நர்வால்

நடந்து முடிந்த PKL 12-வது சீசனுக்கான ஏலத்தில், பிரபல கபடி வீரர் பிரதீப் நர்வாலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராத நிலையில், கபடி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி அளித்துள்ளார் பிரதீப் நர்வால்.

கைக்கொடுக்காத டெஸ்ட்.. வாழ்வு தந்த டி20: அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கீப்பரான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.