பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றது - மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை!
“பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் கூடக்கூடிய, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் கூடக்கூடிய, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இளமைத் தேசிய கிரிக்கெட் வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியைச் சேர்ந்தவுமான யஷ் தயால் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓல்ட் டிராஃபோர்டில் நடைப்பெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. லியாம் டாஸனின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டமிழந்ததன் மூலம், 114.1 ஓவர்களில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயத்தால் 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது நடைப்பெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்கு வரமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என FIDE அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை போட்டிகள் நடைபெறும் எனவும், போட்டி நடைபெறும் நகரம்குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் FIDE தெரிவித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சமீபத்தில் நடத்திய வெற்றிப் பேரணி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் பேரணிக்கு ஏற்பாடு செய்ததன் விளைவாக ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள்குறித்து கர்நாடக அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
தனது சொந்த மண்ணான ஜமைக்காவில் நடைப்பெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக ஆண்ட்ரே ரஸ்ஸல் அறிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வரலாற்றில் மோசமான சாதனையினை நிகழ்த்தியுள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
”நானும், பாருபள்ளி காஷ்யப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். மன நிம்மதி, வளர்ச்சிக்காக இந்த முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்புக் கொடுத்ததற்கு நன்றி” என இந்தியாவின் ஒலிம்பிக் மெடல் வின்னரும், பேட்மிண்டன் வீராங்கனையுமான சாய்னா நேவால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
3 மணி நேரம் 4 நிமிடங்கள் நடைப்பெற்ற விம்பிள்டன் ஆடவருக்கான இறுதிப்போட்டியில், நடப்புச் சாம்பியன் அல்காரஸை வீழ்த்தி பட்டத்தை வென்றார் உலகின் நம்பர் 1 வீரர் சின்னர்.
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் வாஷிங்டன் சுந்தர்.
'ஸ்பியர்' (Spear) மற்றும் 'ஜாக்ஹாம்மர்' (Jackhammer) போன்ற தனித்துவமான ஷாட்களுக்கு புகழ்பெற்ற 58 வயதாகும் கோல்டுபர்க், தொழில்முறையான WWE மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) 2025 தொடரின் பரபரப்பான சேலஞ்சர் போட்டியில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி, MI நியூயார்க் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆல் ரவுண்டராக அசத்திய பொல்லார்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜானிக் சின்னர், விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து, கார்லோஸ் அல்கராசுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், ராகுல் டிராவிட்டின் சாதனையினை முறியடித்துள்ளார் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்.
லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூலை 10, 2025) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.
இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் 1-1 என சமனில் உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாரவின் ”400 ரன்கள்” டெஸ்ட் ரெக்கார்ட்டினை யாரும் முறியடிக்காத நிலையில், லாரா ஒரு சில வீரர்களை கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்பட்டு வந்த பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி கடந்த திங்கள்கிழமை இரவு காலமானார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சுப்மன் கில் பரிந்துரைத்த பீல்ட் செட்-அப்பினை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா நிராகரித்தார். இதனால், அமைதியாக சுப்மன் கில் சென்றார். இதுத்தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்திய கிரிக்கெட் உலகின் மன்னன், அசாதாரண நாயகன், கேப்டன் கூல், தல என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 7) தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி.
கேரளா கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ராஜஸ்தான் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் அதிக தொகைக்கு ஏலம் சென்ற வீரர் என்ற புதிய சாதனயை படைத்துள்ளார்.