K U M U D A M   N E W S

அரசு

ரயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்ல வேண்டாம்... பொதுமக்களுக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்!

ரயில்களில் அல்லது ரயில்வே நிலையங்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று ரயில் பயணிகளுக்கு சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெயிண்ட் அடிப்பது தான் வேலையா? - மத்திய அரசை சாடும் தமிழகம்

இந்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் கண் தானம்? - சுகாதாரத்துறை விளக்கம்

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் இறந்தவர் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உறவினர்களின் அனுமதி இல்லாமல் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

"வருத்தமா இருக்கு.." காரணத்தோடு புது புயலை கிளப்பிய இபிஎஸ்

தமிழ்நாடு போதைப்பொருட்கள் கடத்தலின் கேந்திரமாக விளங்குவது வருத்தமளிக்கிறது. காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பட்டாசு வெடிக்கலாம்... ஆனால் சத்தம் வரக் கூடாது.. புகை வரக் கூடாது.. தீபாவளிக்கு புது ரூல்ஸ்!

தீபாவளியன்று பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை மாதக்கணக்கில் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மக்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.90 லட்சத்தில் அமைகிறது ஆராய்ச்சி பூங்கா

கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.90 லட்சத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம்

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை உறுதி! - துணை முதல்வர் கொடுத்த ஹாட் அப்டேட்

விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் கருணாநிதிக்கு இருந்த அனைத்து போர் குணங்களையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"குறைந்தபட்ச ஊதியம் வேண்டும்.." ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் ரூ.665ஐ வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலநிலை மாற்ற விழிப்புணர்வுக்கு நிதி ஒதுக்கீடு

காலநிலை மாற்ற வீராங்கனைகள் திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  100 மின்சார ஆட்டோ வாங்க ரூ.3.77 கோடியும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ரூ.10.80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது

ஆம்னி பேருந்துகளுக்கு வரி கிடையாது.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

ஸ்ட்ரெச்சரில் மூதாட்டி.. கொட்டும் மழையில் நேர்ந்த கொடுமை - நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி காட்சி

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொட்டும் மழையில் மூதாட்டியை காக்க வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது, சிடி ஸ்கேன் எடுக்க பணம் கட்டும் வரை கொட்டும் மழையில் ஸ்ட்ரெச்சரில் மூதாட்டி இருந்துள்ளார்.

சுவரில் மோதிய பஸ்.. ஜஸ்ட் மிஸ்!! - டிரைவரால் பிழைத்த 10 உயிர் - திக் திக் காட்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

செயலில் ஒன்றுமில்லை.. விளம்பரம் தான் அதிகமா இருக்கு.. தமிழிசை சவுந்தரராஜன்

மழைக்கால தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயலை விட விளம்பரம் தான் அதிகமாக உள்ளது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை மட்டுமே தமிழகம் இல்லை - தமிழக அரசுக்கு EPS கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கையை எடுக்காமல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துவதா என இபிஎஸ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்செந்தூர் கோயிலில் தங்கும் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.68.36 கோடியில் ரூ.68.36 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

சென்னைக்கு ரெட் அலர்ட்.. முதலமைச்சர் அவசர ஆலோசனை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 5 முதல் மார்ச் 27 வரை நடைபெறும். பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... ஆட்சியர்களுக்கு பறந்த கடிதம்

நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

"மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு திமுக அரசு” - ராஜன் செல்லப்பா

"மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு திமுக அரசு” - ராஜன் செல்லப்பா

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே டிரைவிங்... ஓட்டுநருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்... தமிழக அரசு அதிரடி!

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசுப் பேருந்தை ஓட்டிய டிரைவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுக்கும் விதமாக, போக்குவரத்துத் துறை அவர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிரியர்களின் பைக்கை கழுவிய மாணவர்கள்.. அரசு பள்ளியில் அவலம்

பெரம்பலூர்: ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்காக மாணவர்களை வைத்து ஆசிரியர்கள் இருசக்கர வாகனங்களை கழுவ வைத்துள்ளனர்

#BREAKING: இப்படி ரேட் ஏறுதே.. இது Ice cream-ஆ இல்ல தங்கமா?

ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.3 முதல் ரூ.70 வரை அதிகரிப்பு