K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

"லக்கி பாஸ்கர்" படபாணியில் கொள்ளையடித்த வங்கி மேலாளர்.. வயதானவர்களின் வைப்பு நிதியை குறி வைத்து மோசடி!

லக்கி பாஸ்கர் படத்தில் யாரிடமும் சிக்காமல் கோடிக்கணக்கான ரூபாய் வங்கி பணத்தை மோசடி செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து, வங்கி மேலாளர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயுடன் வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்தது போன்று, சென்னை அண்ணா நகரை சேர்ந்த இண்டஸ்இண்ட் வங்கி கிளை மேலாளர் லக்கி மஞ்சுளா கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவலாளி அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி..!

போலீசார் விசாரணையில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாநில உரிமைக்கு குரல் கொடுத்தால் ஆன்ட்டி நக்சலைட்டுகள்.. விமர்சிக்கும் மத்திய அரசு - திருச்சியில் கனிமொழி பேச்சு

மாநில உரிமைக்கு குரல் கொடுத்தால் ஆன்ட்டி நக்சலைட்டுகள் என மத்திய அரசு அவர்களை அச்சுறுத்துகிறது என திருச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து... ஒருவர் உயிரிழப்பு.. 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை ஆதீனத்தின் கோரிக்கை நிராகரிப்பு.. கறார் காட்டும் சைபர் கிரைம் காவல்துறை

காவல்துறை சம்மனுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக விருப்பம் தெரிவித்து மதுரை ஆதீனம் கடிதம் எழுதியுள்ள நிலையில், நேரில் தான் ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்.. வாலிபர் கைது

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சித்தி கொடுமையால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை, சித்தி கைது!

சென்னை ஓட்டேரியில் சித்தியின் கொடுமை தாங்க முடியாமல் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை, சித்தி கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

முடிவுற்ற திட்டப் பணிகள்.. தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் சார்பில், ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ப்ரஷர் குக்கரில் சமைக்கிறீங்களா.. மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

பிரபல மருத்துவர் ஒருவர் சமீபத்தில் சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதிவில், ஒரு நபருக்கு ப்ரஷர் குக்கரில் சமைத்து சாப்பிட்டதால், உடலில் கடுமையான ஈயம் (lead) விஷம் கலந்த உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

போற இடத்துல காபி தரங்களா? நானே வந்திருப்பனே.. வீடியோ காலில் தொண்டர்களுடன் பேசிய முதலமைச்சர்!

வீடு வீடாகச் சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலம் கலந்துரையாடினார்.

ஓரணியில் தமிழ்நாடு: மக்களிடம் கேட்கப்படும் 6 கேள்வி.. திமுகவின் பலே ஐடியா

2026 ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தி தேர்தல் பணிகளை திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ’ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

இவரெல்லாம் வாத்தியாரா? 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரக்கமில்லாத பெற்றோர்.. குப்பையில் வீசிய குழந்தையை கவ்விச் சென்ற நாய்!

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பெற்றெடுத்த குழந்தையை குப்பையில் பெற்றோர் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தையினை நாய் கவ்விச் சென்ற அவலமும் நடந்தேறியுள்ளது.

சென்னையில் நகை வியாபாரி கடத்தல்.. ரூ.31 லட்சம் நகைகள் மற்றும் பணம் கொள்ளை!

சென்னையில் நகை வியாபாரியை கடத்திச் சென்று ரூ. 31 லட்சம், தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். நம்பர் ப்ளேட்டை மாற்றி, வாகனத்தில் HEALTH டிப்பார்ட்மண்ட் ஸ்டிக்கர் வைத்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டார்ச்சர் செய்றாங்க.. என் சாவுக்கு தி.மு.கவினர் காரணம்.. அ.தி.மு.க ஐ.டி நிர்வாகி தற்கொலை..!

டார்ச்சர் செய்றாங்க என் சாவுக்கு தி.மு.கவினர் காரணம் என ஆடியோ வெளியிட்டு அ.தி.மு.க, ஐ.டி நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அஜித்குமார் தாக்கப்படும் வீடியோ வெளியிட்ட நபருக்கு பாதுகாப்பு தேவை – திருமாவளவன் வலியுறுத்தல்

அஜித்குமார் படுகொலை வழக்கில் வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட நபருக்கும் சாட்சிகளுக்கும் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் சுற்றுப்பயணம்…நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு

எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தில் பங்கேற்க நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் எஸ்.பி. மிரட்டல்- இபிஎஸ் கண்டனம்

மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

விமானத்தில் வனவிலங்கு கடத்தல்: சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை!

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அவற்றை திரும்பி அனுப்பி வைத்தனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என காவல்துறையினர் உறுதி செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு?- அன்னதானம் வழங்கக்கூடாது என அறிவுறுத்தல்

அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் 250 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இளைஞர் லாக்கப் மரணம்: வீடியோ எடுத்தவர் பாதுகாப்பு கேட்டு மனு

மடப்புரம் கோவில் இளைஞர் அஜித்குமாரை காவலர்கள் அடுத்து துன்புறுத்தும் வீடியோவை எடுத்த ஊழியருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி டிஜிபியிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி தான் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் நம்பிக்கை

சாதி மத பேதமின்றி தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் வரும் ஆபத்தை தடுக்க நாம் ஒரே குடையின் கீழ் வர வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை அறிவித்துள்ளார்

புதுக்கோட்டையில் பிரசவசத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்..உறவினர்கள் திடீர் முற்றுகையால் பரபரப்பு

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், பிரசவத்தின்போது வலிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் முற்றுகை