K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்காது என அறிவிப்பு

அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் 100 சதவீதம் தொழிலாளர்கள் நாளை வேலைக்கு செல்வதால் பேருந்துகள் ஓடும். எங்களது கூட்டமைப்பில் 23 சங்கங்கள் உள்ளன என அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு

பிரதமரை கொல்ல சதித்திட்டம் தீட்டியவருக்கு சிலையா? – அர்ஜூன் சம்பத் கேள்வி

திமுக ஆட்சியில் பட்டியல் இனமக்கள் படும் துன்பத்தைப்பற்றி பேசவேண்டிய விசிக பேசாமல், மௌனம் காக்கிறது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து முத்தரசன் குரல் கொடுக்கிறார்- இபிஎஸ் கடும் விமர்சனம்

2026 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான அதிமுக ஆட்சியை கொடுக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என இபிஎஸ் பேச்சு

திருச்செந்தூர் கும்பாபிஷேகம்: மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தான் என்னுடைய கடமை...கனிமொழி எம்.பி.

என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களுடைய நம்பிக்கை. அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும் என திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன் நின்று அனைத்து பணிகளையும் மேற்கொண்டது குறித்து கனிமொழி எம்.பி. பதில்

கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்து- உயிர் தப்பிய பக்தர்கள்

பெரம்பலூர் அருகே புகழ்பெற்ற அய்யனார் கோவில் தேர் திருவிழாவின்போது அச்சு முறிந்து தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிலும் சாய்ந்த தேர் மற்றொரு தேர்மீது விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக வடமிழுத்த பக்தர்கள் உயிர் தப்பினர்.

நிகிதா மீது சென்னையில் மோசடி புகார்...போலீஸ் விசாரணை

அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின்

மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலி..விஜய் இரங்கல்

விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

அரசு பள்ளியில் மதுபோதையில் மயங்கி விழுந்த ஆசிரியர்.. கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை..!

Government school, drunk, teacher who fainted, education department officials, அரசு பள்ளி, மதுபோதை, மயங்கிவிழுந்த ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகள்

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. மாரடைப்பால் உயிரிழந்த அசாம் பெண்!

அசாம் மாநிலத்தில் இருந்து, விமானத்தில் சென்னை வழியாக ஐதராபாத்திற்கு டிரான்சிட் பயணியாக சென்ற பெண் விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கால்வாய் அமைக்கும் பணியினால் ரயில்கள் தாமதம்.. பயணிகள் அவதி!

நாகர்கோவில் அருகே தண்டவாளத்தின் அடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால், நெல்லை வழியாக நாகர்கோவில் வரும் ரயில்கள் தாமதமாக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்ததால், ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இன்டெர்லாக் செய்யப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது விபத்து - ரயில்வே நிர்வாகம்

பள்ளி வேன் மீது, சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், வேன் ஓட்டுநர் தான் விபத்துக்கு காரணம் என்றும், வேகமாக இயக்கியதாகவும், ரயில்வே தண்டவாளத்திற்குள் நுழைந்ததாகவும் ரயில்வே தரப்பில் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகிவுள்ளது.

நிர்வாண புகைப்படங்களை வெளியிடவா? காதல் மனைவியை மிரட்டிய கொடூர கணவன்

மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட போவதாக மிரட்டிய கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து.. 2 மாணவர்கள் உயிரிழப்பு!

கடலூரில் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதி கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் பலர் படுகாயம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு!

போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் கோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது. இருவரின் ஜாமின் மனுக்களையும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

OLA நிறுவனத்தில் வேலை.. ரூ.22 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை வழங்கி 56 நபரிடம் ரூ. 22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜூலை 9: பொதுமக்களின் கவனத்திற்கு.. ஆட்டோ, பஸ் ஓடாது..!

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் வரும் 9 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

நாங்கள் குடிமக்கள் இல்லையா? .. ஜாதி சான்றிதழ் கேட்டு தரையில் அமர்ந்து பழங்குடியின தர்ணா போராட்டம்!

பல வருடங்களாக பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காதால் மாணவ மாணவிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரானில் சிக்கிய 15 மீனவர்கள்.. சென்னை வந்தவர்களை வரவேற்ற நயினார் நாகேந்திரன்!

ஈரான் நாட்டில் இருந்து மீட்டு அழைத்து வரப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்களை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

"லக்கி பாஸ்கர்" படபாணியில் கொள்ளையடித்த வங்கி மேலாளர்.. வயதானவர்களின் வைப்பு நிதியை குறி வைத்து மோசடி!

லக்கி பாஸ்கர் படத்தில் யாரிடமும் சிக்காமல் கோடிக்கணக்கான ரூபாய் வங்கி பணத்தை மோசடி செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து, வங்கி மேலாளர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயுடன் வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்தது போன்று, சென்னை அண்ணா நகரை சேர்ந்த இண்டஸ்இண்ட் வங்கி கிளை மேலாளர் லக்கி மஞ்சுளா கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவலாளி அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி..!

போலீசார் விசாரணையில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாநில உரிமைக்கு குரல் கொடுத்தால் ஆன்ட்டி நக்சலைட்டுகள்.. விமர்சிக்கும் மத்திய அரசு - திருச்சியில் கனிமொழி பேச்சு

மாநில உரிமைக்கு குரல் கொடுத்தால் ஆன்ட்டி நக்சலைட்டுகள் என மத்திய அரசு அவர்களை அச்சுறுத்துகிறது என திருச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து... ஒருவர் உயிரிழப்பு.. 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை ஆதீனத்தின் கோரிக்கை நிராகரிப்பு.. கறார் காட்டும் சைபர் கிரைம் காவல்துறை

காவல்துறை சம்மனுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக விருப்பம் தெரிவித்து மதுரை ஆதீனம் கடிதம் எழுதியுள்ள நிலையில், நேரில் தான் ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.