K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

நான் பேசுன ஆடியோவை வெளியிடுங்க.. அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு பதில்

”ஞானசேகரனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. நான் அவரிடம் ஒருமுறை கூட போனில் பேசியதில்லை” என ஈரோட்டில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சுவர் ஏறி குதித்து உள்ளாடைகள் திருட்டு- CCTV கேமராவில் சிக்கிய மர்ம நபர்!

சூலூர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், மர்ம நபர் CCTV கேமராவில் சிக்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம்!

குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் மத்திய அரசின் ’விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான்’ என்னும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குருந்தங்குளம், மதகுடிப்பட்டி, ஏ.வேலங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

அங்கன்வாடி கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி.. அதிர்ச்சியில் பெற்றோர்

அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கிய கொழுக்கட்டையில் உயிரிழந்த நிலையில் கரப்பான் பூச்சி இருந்துள்ள சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபில் ரிப்போர்ட் பார்த்து பயிர் கடனா? முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (ஜூன் 6) முதல் தொடங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மீண்டும் விமானத்தின் மீது அடிக்கப்பட்ட லேசர் லைட்.. போலீசார் தீவிர விசாரணை

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானத்தின் மீது இரண்டாவது முறையாக பச்சை நிற லேசர் லைட் அடிக்கப்பட்டகால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினருக்கு டிஜிபி வெளியிட்ட முக்கிய உத்தரவு.. காரணம் என்ன?

சீருடையுடன் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டாம் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

முடிவுக்கு வரும் மீன்பிடி தடைகாலம்.. படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரி

மீன்பிடி தடைகாலம் நிறைவடைய உள்ள நிலையில், மீன்பிடி படகுகளை மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் இன்று ஆய்வு செய்தார்.

போலீசாரிடம் ஆபாசமாக பேசிய விசிக நிர்வாகிகள்.. வைரல் வீடியோ

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக பிரமுகர்.. போலீசார் வலைவீச்சு!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக வட்டச் செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

யானை வழித்தடத்தை பாதுகாக்க கோரிய வழக்கு.. அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை, வனக்கோட்ட பகுதிகளில் யானை வழித் தடங்களை பாதுகாக்க வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளுடன் வெங்காயம் நடவு செய்த கோவை கலெக்டர்!

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் விவசாயிகளுடன் இணைந்து வெங்காயம் நடவு செய்தது அப்பகுதியில் பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

விவசாயி சடலத்தை பீகாருக்கு மாற்றி அனுப்பிய அரசு மருத்துவமனை- கொந்தளிப்பில் உறவினர்கள்

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அலட்சியத்தால் தமிழகத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் சடலம் பீகாருக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராடி வருகின்றனர்.

சிக்கன் குழம்பில் பல்லி.. உணவகத்தில் நாடகமாடிய 4 பேருக்கு போலீசார் வலை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கிவரும் உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நாடகமாடிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை - டி.ஆர். பாலு

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மக்களுக்கும் விளக்கும் வகையில், ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை என திமுக பொருளாளரும், மக்களவைக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரியாணி சாப்பிடுவதில் சகோதரிகளிடையே தகராறு.. தங்கையின் விபரீத முடிவு!

பிரியாணி சாப்பிடுவதில் சகோதரிகள் இடையே ஏற்பட்ட தகராறில், தங்கை மொட்டை மாடியில் இருந்து குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் பரபரப்பு.. வீடு புகுந்து ரவுடி படுகொலை..!

சென்னை தண்டையார்பேட்டையில், வீட்டில் புகுந்து ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து பாஜக சதி - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பா? மத்திய அரசின் முடிவை விமர்சித்த முதல்வர்

இந்தியாவின் முதல் சாதிவாரி டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திருமணம் ஆனதாக கூறி ஒரே வீட்டில் வாழ்ந்த ஆண்- பெண் தற்கொலை..!

ஓசூர் அருகே திருமணம் ஆனதாக கூறி ஒரே வீட்டில் வாழ்ந்த ஆண், பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டியின் உதட்டை கடித்த வாலிபர்.. பரபரப்பு சம்பவம்

ஜோலார்பேட்டை அருகே வாலிபர் ஒருவர் மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசிகவில் கோஷ்டி பூசல் மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்..!

கிருஷ்ணகிரி விசிகவில் கோஷ்டி பூசல் பூதாகரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தலைவலிக்கு ஆளான தலைமை மாவட்டச் செயலாளரை இடைநீக்கம் வரை செய்துள்ளது.

அமைச்சர்களை ஓரங்கட்டிய மேயரின் கணவர்..! கட்டம் கட்டிய கட்சித் தலைமை..! பக்காவாக காய்நகர்த்தும் மூர்த்தி..!

உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் கையில் எடுத்து ஆடுவதாக பல மாதங்களாக புகார்கள் புகைந்துகொண்டிருந்தன. அதற்கு தீர்வுகாணும் வகையில் முதல்வர் கையில் சாட்டை எடுக்க, மதுரையில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

அமெரிக்க டாலரில் முதலீடு அதிக லாபம் என ஆசைவார்த்தை ரூ.6.88 லட்சம் மோசடி... 2 பேர் கைது

டாலரில் மூதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ. 6.88 லட்சம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.