K U M U D A M   N E W S

ரத்து

லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் கோளாறு...360 பயணிகளின் திக்.. திக்.. நிமிடங்கள்

லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் வந்த விமானம் நடு வானில் பறந்து போது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, விமானம் லண்டனுக்கு அவசரமாக திரும்பிச் சென்று தரையிறங்கியது.

மருத்துவ படிப்புகளுக்கான இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (ஜூன் 6) முதல் தொடங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு? கருத்து கேட்கும் தமிழக அரசு

தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து ஆண்டுதோறும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்க குழு அமைத்துள்ளது தமிழக அரசு.

ரவி வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாரா? உண்மையினை உடைத்த ஆர்த்தி

நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவியுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள முடிவெடுத்த நிலையில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது இணையதளங்களில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், மீண்டும் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் மீண்டுமா? நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா சிகிச்சை..!

நாட்டில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துவரும் நிலையில், தற்போது 257 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு.. அமைச்சர் சிவசங்கர் கொடுத்த அப்டேட்!

எரிவாயு தகன மேடையில் தகனத்திற்காக பிணங்கள் காத்திருந்த சம்பவம் விவாதங்களை எழுப்பிய நிலையில் எதிர்பாராத கோடை மழையால் ஏற்பட்ட மின் தடை தான் காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் வாக்குறுதிகளில் முதன்மையான மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பு முறை குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்.

சென்னையில் 8 விமானங்கள் திடீரென ரத்து.. பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து திருச்சி, தூத்துக்குடி, மதுரை, ஆகிய நகரங்களுக்கு செல்லும் 8 விமானங்கள் முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதியடைந்தனர்.

திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரம்: திண்டுக்கல் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு ரத்து!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு.. மலை ரயில் போக்குவரத்து ரத்து!

மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ரெயில் பாதையில் விழுந்த ராட்சச பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. ரெயில் பாதையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இரண்டாவது நாளாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா வைரஸ்...தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை

கேரளாவில் மீண்டும் பெண் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஆப்ரேஷன் சிந்தூர்: பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

"இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்” விரைவில் முடிவுக்கு வரும் - டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் நியமனம் ரத்து!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா வாகனங்களுக்கு 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்

சுற்றுலா வாகனங்களுக்கான அகில இந்திய உரிமம் 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற தமிழக போக்குவரத்து துறையின் முடிவில் தலையிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் இளநிலை பொறியாளர்கள் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளிவைப்பு!

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

கோவைக்கு வருகை தந்த விஜய்.. தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்ட நிலையில், அவரை காண ரசிகர்கள் திரண்ட நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், திமுக கொடியை சேதப்படுத்தியதாகவும், 2 திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து பீளமேடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சியை ரத்து செய்த ஸ்ரேயா கோஷல்

இது நம் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயம். இந்த அர்த்தமற்ற வன்முறையால் சிதைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் என் இரங்கல்.

என்.எல்.சிக்கு எதிராக போராட்டம்...அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு ரத்து

என்.எல்.சி.-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியார் பல்கலை துணைவேந்தர் வழக்கு.. ஜாமீன் ரத்துசெய்யக்கோரிய மனுவை தள்ளிவைத்த நீதிமன்றம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

தொடர் விடுமுறை எதிரொலி...கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்!

கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா தலங்களிலும், நகர்ப்பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

சிறுவன் ஏற்படுத்திய கார் விபத்தில் முதியவர் பலி.. புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!

14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி...திமுகவை சரமாரியாக சாடிய விஜய்

தொடர் அரசியல் மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் தரப் போகின்றனர்.

அமைச்சர் பங்கேற்கும் விழாவிற்காக வசூல் வேட்டை...சுகாதாரத்துறை அதிகாரிகளின் செயலால் அதிர்ச்சி

ஆடியோ விவகாரம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்ட 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

சென்னை போக்குவரத்துக் கூடுதல் ஆணையர், பொருளாதார குற்றப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Agasthiyar Falls | 2வது நாளாக தொடரும் தடை .. என்ன காரணம்? | Tirunelveli News | Manimuthar Waterfalls

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு