K U M U D A M   N E W S

ஆசிரியர்களின் பைக்கை கழுவிய மாணவர்கள்.. அரசு பள்ளியில் அவலம்

பெரம்பலூர்: ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்காக மாணவர்களை வைத்து ஆசிரியர்கள் இருசக்கர வாகனங்களை கழுவ வைத்துள்ளனர்

மக்களே உஷார்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம் | Kumudam News 24x7

3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட நிதி எத்தனை கோடி தெரியுமா? | Kumudam News 24x7

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு.

Fishermen Arrest: இதுக்கு ஒரு ENDஏ இல்லையா? தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்...21 மீனவர்களின் நிலை?

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது.

Samsung Protest: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்... கொடுங்கோன்மை தான் திராவிட மாடலா..? சீமான் கேள்வி!

உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை, காவல்துறை மூலம் அடித்து விரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

என்.எல்.சி வழக்கு... மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

என்எல்சி நிர்வாகத்துக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும்  இடையே உள்ள பிரச்னைக்கு தீர்வு காண 6 மாதங்களில் உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

Air Show 2024: மெரினா கோர சம்பவம்... அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை... சீமான் கண்டனம்!

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது, அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TVK Vijay: வான் சாசக நிகழ்ச்சியில் விபரீதம்... தமிழக அரசுக்கு அட்வைஸ் செய்த தவெக தலைவர் விஜய்!

மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற 5 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

Air Show 2024: வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழப்பு... காரணத்தை கண்டுபிடித்த திருமாவளவன்!

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Air Show Tragedy : வான் சாகச நிகழ்ச்சி... யாரும் அரசியலாக்க வேண்டாம்... அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம்!

Ma Subramanian About Air Show Tragedy : சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 93 பேர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.

#JUSTIN | அடுத்த 6 நாள்.. புரட்டி எடுக்க ரெடியான கனமழை.. அதிர்ச்சி தகவல்

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

#JUSTIN: சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை | Kumudam News 24x7

அரசு மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்ததால் வார்டுகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் இரவு முழுவதும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டனர்.

லீவ் நாளில் வேலை காட்டப்போகும் கனமழை - மக்களே நாளைக்கு உஷார்!!

தமிழ்நாட்டில் வருகிற 10ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.. ராமதாஸ் ஆக்ரோஷம்!

தமிழக மீனவருக்கு 18 மாதம் சிறை, 4 மீனவர்களுக்கு ரூ.1.60 கோடி அபராதம் விதித்துள்ள சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

குற்றவாளி கூண்டில் செந்தில் பாலாஜி.. விசாரணையை தள்ளிவைக்க நீதிமன்றம் மறுப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறை தொடர்ந்த வழக்கை தள்ளிவைக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை | Kumudam News 24x7

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பாடகி சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது | Kumudam News 24x7

பாடகி சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்" - இலங்கை துணைத் தூதர் ஞானதேவா

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என இலங்களை துணைத் தூதர் ஞானதேவா நம்பிக்கை அளித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்... உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக மீனவர் சங்கம்!

Tamil Nadu Fishermen Hunger Strike : சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தமிழக மீனவர்ககளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (அக். 3) அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

#BREAKING | மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக ரோகிணி தேவி நியமனம் - தமிழ்நாடு அரசு. 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

#BREAKING || அக்.15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு. அக்டோபர் 15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.

14 மாவட்டங்களில் கனமழை - இந்த முறை மிஸ் ஆகாது எச்சரிக்கை ..!!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

#BREAKING: சர்ச்சை பேச்சு.. மகாவிஷ்ணு வழக்கில் புதிய திருப்பம்

அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசியதாக வழக்கு. வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

பேருந்தில் நடத்துனருக்கு கத்திக்குத்து..பயணிகளை அலறவிட்ட இளைஞர்!

பெங்களூருவில் பேருந்துக்குள் நடத்துனருக்கு கத்திக்குத்து.