K U M U D A M   N E W S
Promotional Banner

அரசியல்

த.வெ.க-வில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? - நடந்தது என்ன? உண்மையை விளக்கிய சி.டி.ஆர்.நிர்மல்குமார் 

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை நீக்கிய பழைய ஸ்கீரின் ஷார்ட்டுகளை எடிட் செய்து இதுபோன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரலாறு காணாத ஊழல்...திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

வீட்டு வாசலில் குவிந்த போலீசார்..தமிழிசை உட்பட பாஜகவின் முன்னணி தலைவர்கள் கைது

பாஜக சார்பில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், பாஜகவின் முன்னணி தலைவர்கள் வீட்டின் முன் இன்று காலை முதலே போலீசார் குவிந்து வந்த நிலையில் தமிழிசை கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் - கிரிஷ் ஜோடன்கர் கருத்து

வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடன்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

எத்தனை கோடிகளை கொட்டினாலும் இனி திமுகவின் ஊழல் வித்தைகள் செல்லாது- விஜய் சாடல்

எத்தனைக் கோடிகளைக் கொட்டினாலும், இனி இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அதிமுகவா? தவெகவா?.. முட்டிமோதும் தந்தை மகன்?.. தைலாபுர கூட்டணி கணக்கு என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாசுக்கும் - அன்புமணிக்கும் இடையே மீண்டும் வாதம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தி மொழி படித்தால் கட்டிட வேலைகளை தான் செய்ய வேண்டும்- எ.வ‌.வேலு விமர்சனம்

இந்தி படித்த அனைவரும் தமிழ்நாட்டில் கட்டிட வேலை, பெயிண்ட் வேலை, தார் சாலை அமைக்கும் வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.

ஒபிஎஸ் உடன் செங்கோட்டையன் சந்திப்பு? – அதிமுகவில் மீண்டும் புதிய அணி

தமிழக சட்டப்பேரவையில் மூன்றாம் எண் நுழைவு வாயிலை பயன்படுத்தும் ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் இன்று சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐந்து பேரோடு வாழ்பவர்கள் வடநாட்டவர்கள்.. இதுதான் உங்க நாகரீகம்.. துரைமுருகன் விமர்சனம்

வடநாட்டவர் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு 4, 5  பேரோடு வாழ்பவர்கள் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. தவெக நிர்வாகிகளோடு விஜய் சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் 19 கட்சி மாவட்ட செயலாளர்கள் பட்டியலை  அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.முன்னதாக மாவட்ட பொறுப்பாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

மதுபான ஊழலில் திமுக சிக்காது- அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதில் 

இபிஎஸ் அழைத்தால் நான் நேரில் விவாத மேடைக்கு சென்று அவருக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.

தமிழ் மொழியை மத்திய அரசு சிறுமைப்படுத்தும் நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்

அமலாக்கத்துறை சோதனையை திசை திருப்ப திமுக இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புவதாக பாஜக விமர்சனத்திற்கு  பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக இந்த பிரச்னை சென்று கொண்டிருப்பதால் இந்த கருத்தில் உண்மையில்லை என்றார்

நம்மை ஆளுகிறவர்களுக்கு படிப்பறிவு இல்லை.. திமுகவை தாக்கிய அண்ணாமலை?

தமிழகத்தில் நம்மை ஆளுகிறவர்களுக்கு படிப்பறிவு இல்லை என்கின்ற நிலையில், நம் குழந்தைகளுக்காவது நல்ல படிப்பறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் பாஜக தேசிய கல்விக் கொள்கையை கையில் எடுத்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் மீது இன்றும் அந்த குற்றச்சாட்டு உள்ளது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட்டு பள்ளி கல்வித்துறைத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஒப்புதலே கொடுக்கவில்லை என பச்சை பொய் பேசுகிறார்கள் என சாடினார்.

மார்ச் 18ல் அனைத்துக்கட்சி கூட்டம் – அழைப்பு விடுத்த தேர்தல் அதிகாரி

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.

தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கை.. அறிவுள்ளவர்கள் ஏற்பார்களா? பழனிவேல் தியாகராஜன்

தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கை மாடலை தமிழ்நாட்டில் திணிக்க பாஜக முயற்சி செய்து வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தொகுதி மறுவரையறை.. ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின்.. கர்நாடகா பறந்த பொன்முடி

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு தமிழக அமைச்சர் பொன்முடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.

இனி மாதம் ரூ.2500.. புதுச்சேரி பெண்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரங்கசாமி!

 21 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, இனி 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை.. ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்த எ.வ.வேலு

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்தார்.

PM SHRI பள்ளி விவகாரம்.. இந்தாங்க உங்க லெட்டர்! தர்மேந்திர பிரதான் பதிவு.. பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்

பிஎம்-ஸ்ரீ பள்ளி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள கடிதத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரம்.. ஒடிசா முன்னாள் முதல்வரை சந்தித்த தமிழக குழு

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் குழு  இன்று ஒடிசா சென்ற நிலையில் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

மக்களை மாடுகள் போல் நடத்துகிறார்.. விஜய் மீது இஸ்லாமிய ஜமாத் குற்றச்சாட்டு

மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்துவதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் குற்றம்சாட்டியுள்ளது.

PM SHRI.. யூ-டர்ன் அடித்தார் உங்கள் சூப்பர் முதல்வர்: MP பேச்சால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி

PM SHRI திட்டத்தை தமிழக அரசு ஒப்புக்கொண்டதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்றத்திலுள்ள திமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். 

உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது.. ஸ்டாலினை விளாசிய தமிழிசை

தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு தொகுதி மறுவரையறை பிரச்சினையை ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்றும் அவரது இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

போராடி தான் இன்று  இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளோம் - திருமாவளவன்

நாம் போராடி போராடி தான் இன்று  இந்த அங்கீகாரத்தை பெற்றிக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.