K U M U D A M   N E W S

அரசியல்

மகளிர் உரிமைத் தொகை...மக்கள் கொந்தளிப்பு... திமுக பயந்துவிட்டது... பாமக நிறுவனர் ராமதாஸ்!

பாமகவின் தொடர் வலியுறுத்தலுக்கு வெற்றி; அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர் கத்திக்குத்து... அரசின் மெத்தனப் போக்கே காரணம்... விஜய் சாடல்!

காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவர்களை பாதுகாக்க திமுக அரசுக்கு தெரியாதா?... கேள்விகளால் விளாசிய சீமான்... திணறும் திமுக!

“அரசு மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்?”என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி... திமுக அரசு உணர வேண்டும்... அண்ணாமலை காட்டம்!

குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிப்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் ஈ.வெ.ரா.. மறுபக்கம் வேலு நாச்சியார்.. குழப்பத்தில் விஜய் - ஹெச்.ராஜா காட்டம்

ஒரு பக்கம் ஈ.வெ.ரா.வின் படத்தையும், மறுபக்கம் வேலு நாச்சியார் படத்தையும் வைத்து நடிகர் விஜய் குழப்பத்தில் இருக்கிறார் என்று பாஜக தமிழக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இ.பி.எஸ் பற்றி பேசிவது வீண்.. அவரின் தன்மானம் அரசியல் தெரியும் - சேகர் பாபு அதிரடி

எடப்பாடி பழனிசாமி ஒரு நிலையில்லா மனிதர் என்றும் அவரை பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் உயிருடன் விளையாடும் திமுக... பெரிய போராட்டம் நடக்கப்போகுது.... எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

தமிழ்நாடு அரசு மாணவர்களின் உயிரோடு விளையாடுவது மிகக் கொடுமையானது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுவா பெண்களுக்கான ஆட்சி? திமுக அரசை சாடிய முன்னாள் அமைச்சர்!

பெண்களுக்கான ஆட்சி என்று திமுக சொல்கிறது என்றால் எதற்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியிருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரணும்... சூழ்நிலையை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்... உதயநிதி கோரிக்கை!

சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். பொதுமக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

"STARTUP CHENNAI - செய்க புதுமை"... புதிய அதிரடி திட்டங்களுடன் தமிழ்நாடு அரசு!

ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தொடங்கும் பட்டியலின நபர்களின் உதவித்தொகையை ரூ. 50 கோடியாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு இ.பி.எஸ் ஒரு பொருட்டே கிடையாது.. கூட்டணிக்கு தயாராக இல்லை - புகழேந்தி அதிரடி

எடப்பாடி பழனிசாமியை விஜய் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி ஒரு பொருட்டே இல்லை.. சசிகலா சினிமா ஓட்டுகிறார்... புகழேந்தி காட்டம்!

விஜய், பழனிசாமியை ஒரு பெருட்டாகவே நினைக்கவில்லை, பழனிசாமி மீண்டும் பாஜகவின் காலில் விழுந்து சரணடையும் நிலைக்கு வந்துள்ளார் என அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.

“அதிகாரம் தமிழன் கைக்கு வரக்கூடாதா? அந்த தமிழன் நானாக இருக்க கூடாதா?” - மக்களுக்கு சீமான் வைத்த கேள்வி!

"இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் மற்றும் கட்சத்தீவை மீட்க வேண்டும்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.

தேனாறும், பாலாறும் ஓடும்னு சொன்னாங்க...ஆனால் எதையும் காணொம்... டிடிவி தினகரன் ஆவேசம்

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை... தேர்தலுக்கு முழு வீச்சில் ஆயத்தமாகும் தவெக... கலக்கத்தில் எதிர்கட்சிகள்!

வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடம் மாற்றுதல் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை நடத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு அறிவுருத்தியுள்ளார்.

அதிமுக இணைவுக்கு தடைபோடும் ஆர்.பி.உதயகுமார்?.. ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த ‘மூவ்’ என்ன?

2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்... மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

அனைவருக்கும் பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் மெத்தனப்போக்கு... மளிகை கடை தோறும் எடுத்துச் சொல்லுங்கள்... விஜய பாஸ்கர் பேச்சு!

அதிமுக ஆட்சியின் சாதனைகளை ஒவ்வொரு டீக்கடை தோறும், பெட்டிக்கடை தோறும், மளிகை கடை தோறும் எடுத்துச் சொல்லுங்கள் என அதிமுக தொண்டர்களிடம் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.

சாதி சான்றிதழ் கொடுக்குறதுக்கு என்ன? - சு.வெங்கடேசன் எம்பி ஆவேசம்!

திடீர் திடீர் என்று ஒரு அதிகாரி வந்து திடீர் திடீரென்று மக்களின் வாழ்க்கையில் விளையாடக் கூடாது என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

பயிர் சாகுபடி பணிகளில் அனுபவமற்ற மாணவர்கள்... திமுக அரசை சாடிய சீமான்!

பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை அனுபவமற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் மேற்கொள்வதா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹெச்.ராஜா சொன்னது சரிதான்; தவறே இல்லை - கரு.நாகராஜன் கருத்து

பாஜக பொறுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா சொன்னது உண்மைதான்; அதில் தவறு ஏதும் கிடையாது என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

நான் திமுக காரன்.. இடம் மாறிச்சுன்னா எங்க ஓட்டு விஜய்க்குதான்!,.. வியாபாரிகள் ஆவேசம்!

பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரத்திற்கு மாற்றினால் வரும் தேர்தலில் எங்கள் வாக்கு விஜய்க்கு தான் என பிராட்வே பேருந்து நிலைய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை அழிப்பதுதான்... ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!

திமுக என்கிற கையாளாகாத ஸ்டாலினை சூரசம்ஹார வதம் செய்வார் எடப்பாடியார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இன்றைக்கும் நான் ஆளுநர்தான்... மக்களின் அன்பை ஆண்டு கொண்டிருக்கிறேன்.. தமிழிசை சௌந்தரராஜன்!

மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார். ஆனால் அதிகமான வரவேற்பு உள்ளது போல் முதலமைச்சர் கூறி வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

உரத் தட்டுப்பாட்டால் வாடும் உழவர்கள்... அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!

காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிப்பு: தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.