K U M U D A M   N E W S

???????

முதல்வர் பேசும்போது அரட்டை அடித்த அமைச்சர்..எழுந்து வந்து எம்பி ஜெகத்ரட்சகன் செய்த காரியம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் உரையாற்றிய போது அவரை மதிக்காமல் அருகில் அரட்டை அடித்த அமைச்சர் நாசரின் செயலால் பரபரப்பு

பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்...தவெக தலைவர் விஜய்

என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக வெளியிட்ட அறிக்கை.. பூத் கமிட்டி கருத்தரங்கில் தலைவர் விஜய் பங்கேற்பு!

கோவையில் வரும் ஏப்ரல் 26,27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

’இரட்டை இலக்கு தாங்க..இல்லாக்காட்டி போங்க...’ - சீட்டுக்கு செட்டிங்..? காத்திருக்கும் காம்ரேட்கள்..! தலைவலியில் தலைமை?

தமிழக அரசியல் களத்தில் ’ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ என கொளுத்திப்போடப்பட்ட திரி அறிவாலயத்தில் புகையத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விசிக, காங்கிரஸை தொடர்ந்து காம்ரேட்களும் பல டிமாண்டுகளை திமுக தலைமையிடம் வைப்பதாக கூறப்படுகிறது. அந்த டிமாண்ட் என்ன? திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

இணைந்த கரங்களாக செயல்படுவோம்- மல்லை சத்யா அறிக்கை

முதன்மைச் செயலாளர் துரை வைகோவும், தானும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோவிற்கும், கழகத்திற்கும் துணையாக செயல்படுவோம் என்று மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்...நயினார் நாகேந்திரன் பேச்சு

அமித்ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி பாஜக ஆட்சி அமைத்தது. இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும்.அது அவருடைய பொறுப்பு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ.. மதிமுக கூட்டத்தில் அறிவிப்பு

மதிமுக முதன்மைச் செயலர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப்பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.

ஆளுநரை தபால்காரர் என முதல்வர் கூறுவதா? நயினார் நாகேந்திரன் ஆதங்கம்

ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு தமிழகம் தான் ”வாட்டர்லூ”- MP திருச்சி சிவா சூளுரை

”தமிழகத்திற்கு போர் அறிவிப்பு வந்துவிட்டது. ஒரு புதிய படையெடுப்பு நடந்திருக்கிறது, பதுங்கி இருந்த பகைக்கூட்டம் வேறு சிலரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. எத்தனை படையை கூட்டி வந்தாலும் சந்திப்பதற்கு தமிழ்நாடு தயாராக இருக்கிறது” என திமுக எம்பி திருச்சி சிவா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

என்னோட ஃபோன்ல இருந்து எல்லாத்தையும் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இனியொருமுறை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சனாதான தர்மத்தை நாம் காப்பாற்ற முடியாது

பாஜகவின் அடிமைகள் கூறுவதெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...அமைச்சர் ரகுபதி

குடியரசு துணைத்தலைவர் பேசியுள்ளது உச்சநீதிமன்றத்திற்கு அளித்திருக்கக்கூடிய எச்சரிக்கை மணி என ரகுபதி தெரிவித்துள்ளார்.

மகனா? சத்யாவா? விழிப்பிதுங்கும் வைகோ.. ஸ்மார்ட் மூவ் செய்த துரை வைகோ

மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், தான் வகித்து வரும் கட்சிப்பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். 32 ஆண்டுகளாக வைகோவின் நிழலாக உடன் பயணித்துவரும் மல்லை சத்யாவுக்கு எண்ட் கார்டு போட துரை வைகோ திட்டமிட்டு நகர்த்திருக்கும் ஸ்மார்ட் மூவ் தான் இந்த பதவி விலகல் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

கந்து வட்டியுடன் கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்- அமமுக முக்கிய பிரமுகர் கைது

கந்து வட்டி தடுப்புச்சட்டத்தின் கீழ் அ.ம.மு.கழகத்தின் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக கட்சி கொடியில் யானை சின்னம்- விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

த.வெ.க கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்ப கட்சியாகிய திமுக.. முதல்வரை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி

திமுக கட்சி குடும்ப கட்சி ஆகிவிட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு – அமைச்சரை எச்சரித்த அண்ணாமலை

நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை

திமுகவை போல் கேவலமான அரசு எதுவும் கிடையாது – முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ஆட்சியில் இருப்பவர்கள் திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது. அவர் நல்லவராக இருந்தால் தான், நாட்டுக்கு நல்லது நடக்கும்

அமைச்சர் பொன்முடி பேசியது கருத்து சுதந்திரமா? பதவி நீக்கம் செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாமகவை இழுக்கும் திமுக?.. தாமரையா? சூரியனா?.. சூடுபிடிக்கும் தைலாபுரம் மோதல்!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவை தனது கூட்டணிக்குள் இழுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. ஏற்கனவே எதிரும் புதிருமாய் இருக்கும் தைலாபுரம் தந்தை-மகன் கூட்டணிக்காக தாமரையை தேர்தெடுப்பார்களா? அல்லது சூரியனை தேர்தெடுப்பார்களா? பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

"பாஜக-வுடன் மீண்டும் கூட்டணி" கும்பிடு போட்ட மாஜிக்கள்..! அதிமுக-வில் மேலும் ஒரு விரிசல்...?

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மாஜிக்கள் சிலர் அதிமுகவை விட்டு விலக உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பாஜகவுடன் கூட்டணி...மே.2-ல் கூடுகிறது அதிமுக செயற்குழு

மே.2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தேமுதிகவை கழற்றிவிட்ட அதிமுக? கமலாலயம் முன் நிற்கும் பிரேமலதா? கூட்டணிக்கு அடிபோடும் அண்ணியார்?

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரதமர் மோடியை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இப்படி திடீரென பாஜகவோடு நட்பு பாராட்டுவது ஏன்? அதிமுக கைவிட்டதால் பாஜகவை நாடுகிறதா தேமுதிக? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

BSP-ல் ஒதுக்கப்படுகிறாரா ஆம்ஸ்ட்ராங் மனைவி...வெடிக்கும் உட்கட்சி பூசல்

பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில ஒருங்ணைப்பாளராக உள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இனி கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வரும் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும்–நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சி மாற்றப்பட்டு, என்.டி.ஏ. தலைமையில் புதிய ஆட்சி அமையவேண்டும். அனைவரும் ஆதரவு தரவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என நாயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அதிமுக அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது – சசிகாந்த் செந்தில் எம்.பி.,

திருடர்களை நம்பி அதிமுக வீட்டை ஒப்படைத்து இருப்பதாகவும், பாஜக வளர்வதற்கு தமிழகத்தில் நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் செயலில் அதிமுக செயல்பட்டு இருப்பதாக சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.