K U M U D A M   N E W S

அரசியல்

தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு!

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை... கூட்டணிக்கு புதிய பெயரா?

முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் நடைபெற்ற தவெக தோழமை கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அடுத்த கூட்டத்தில் கூட்டணிக்கான புதிய பெயர் குறித்து முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

'3 மாதங்களில் 8 ஆணவக்கொலைகள்!' - தனிச்சட்டம் கொண்டுவர முதல்வர் விஜய்க்கு ஆளூர் ஷா நவாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 8 ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள ஆளூர் ஷா நவாஸ், நீதிபதி கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று ஆணவக்கொலை தடுப்புக்கான தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.

தவெக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்கள் 'நோ'... அரசியலில் புதிய திருப்பம்!

தவெக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி தொடர்பாக உடனடி முடிவு எடுக்க மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

'40 நாட்களாக தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி வரை பேரம்!' - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

40 நாட்களாக தவெக எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொண்டு ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் உற்சாகம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதிமுகவில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், "துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருக்கிறார்கள்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி? எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜிக்கு தொடர்பு!

தவெக எம்எல்ஏக்களிடம் வேறு கட்சியில் இணையும்படி பேரம் பேசியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"கண் முன்னே எங்களை வளர்த்த இயக்கம் கரைகின்றது.." அதிமுகவில் இருந்து மாஜி அமைச்சர் விலகல்!

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அறிவித்துள்ளார்.

பரபரக்கும் அரசியல் களம்.. தவெக தலைமையில் புதிய கூட்டணி? தோழமை கட்சிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

தங்களது அரசுக்கு ஆதரவளிக்கும் கூட்டணி மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் இன்று மாலை முதல்வர் விஜய் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

அரசு வேலை மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் !

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்செழியனை ஜூலை 6 வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதே வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.