K U M U D A M   N E W S
Promotional Banner

அரசியல்

திராவிடத்திற்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை- கனிமொழி எம்.பி.,

பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய இடத்திலேயே அதிமுகவும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அவர்கள் யார் என்பதை காட்டியுள்ளது என கனிமொழி விமர்சனம்

எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான்- அமைச்சர் கோவி.செழியன்

எடப்பாடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் என புதியதாக எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான் என அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா?- அன்புமணி சரமாரி கேள்வி

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார்? என அரசுக்கு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

கூட்டணி வேறு.. கொள்கை வேறு - முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி

தி.மு.க கையாளாகாத வேலையை காட்ட RSS நிகழ்ச்சியில் சர்ச்சையை கிளப்பி உள்ளதாகவு, கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

முருக பக்தர்கள் மாநாடு விவகாரம்.. அதிமுகவினர் உடலில் ஓடுவது ரத்தமா? பாஜக பாசமா? - ஆர்.எஸ்.பாரதி சாடல்

அண்ணாவின் பெயரைத் தாங்கிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், அண்ணாவுக்கும், பெரியாருக்கும் பெரும் அவமானத்தை தேடித் தந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகச் சாடியுள்ளார்.

இடைத்தேர்தல் முடிவு: 5-ல் 4 இடங்களில் தோல்வி.. பாஜகவினர் அதிர்ச்சி

குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்றது. 5 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்ட நிலையில், 1-ல் மட்டுமே வென்றுள்ளது.

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா புகைப்படங்கள் குறித்த சர்ச்சை.. நயினார் நாகேந்திரன் விளக்கம்!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்று அண்ணா, பெரியார் படங்களுடன் வீடியோ வெளியானது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை, அதனை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்.. ஷாக் கொடுத்த காங்கிரஸ்

குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வருகிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி தற்போது காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

காவலர்கள் பதவி உயர்வு.. புதிய அரசாணை பிறப்பிக்க திருமாவளவன் வலியுறுத்தல்

2002 முதல் பணியில் சேர்ந்த காவலர்கள் பதவி உயர்வு பெற புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

"தமிழகத்தில் நடக்கும் சமூக விரோத நடவடிக்கைகள் மாய்ந்து போக, முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தடைகளை தகர்த்தெறியும் சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு.. ஜி.கே. வாசன் பேட்டி

"முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யார் தடை ஏற்படுத்த நினைத்தாலும் அதனை தகர்த்தெறியும் சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவினை சீண்ட வேண்டாம்: திமுகவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான அவதூறு கார்ட்டூன் விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வை உண்டாக்கியுள்ளது. திமுக ஐடி விங் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது அதிமுக தரப்பில் மாவட்டந்தோறும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.

பட்டியலின மக்கள் மீதான வன்முறை: திமுக ஆட்சியில் உச்சம்- நயினார் நாகேந்திரன்

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் கொடூர உச்சத்தை அடைந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பேருந்துகள் வாங்க ஒதுக்கப்படும் நிதி எங்கே? டிடிவி தினகரன் கேள்வி

அரசு பேருந்து விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், புதிய பேருந்துகள் வாங்க ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுவதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழ்நாட்டில் நடமாட முடியாது.. ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

எடப்பாடி பழனிசாமியை இழிவுப்படுத்தும் செயலில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடர்ந்து ஈடுபட்டால், அவரால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

'முதல்வர் மருந்தகம்' அல்ல.. 'முதல்வர் மாவகம்'- அண்ணாமலை விமர்சனம்

அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் மருந்தக உரிமையாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜகவிடம் நீதிபதி அணி.. வேண்டுகிற தீர்ப்பு கிடைக்கும்: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

"பாஜக நீதிபதி அணியை உருவாக்கி, தங்களுக்குத் தேவையான உத்தரவுகளை நீதிமன்றம் மூலம் சாதித்துக் கொள்கிறது" என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

கீழடிக்கு ஆதரவாக அதிமுக வாய் திறக்காதது அதிர்ச்சியளிக்கிறது- கரூர் எம்பி ஜோதிமணி

”கீழடிக்கு ஆதரவாகவோ, அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாகவோ அதிமுக மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

திமுக தொடர்ந்து ஜெயித்ததாக வரலாறு இல்லை- MLA ராஜன் செல்லப்பா பேச்சு

"தேர்தலில் ஜெயித்து விடலாம் என்ற திமுகவின் ஆசை கனவிலும் நிறைவேறாது: திமுக ஒருமுறை ஜெயித்தால் அடுத்த முறை ஜெயித்ததாக வரலாறு இல்லை" என மேலூர் அருகே நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.

முருகன் மாநாட்டினால் பாஜக ஆட்சிக்கு வருமா? முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி

”திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார். வைகைச்செல்வன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். வைகைச்செல்வன் கூறிய கருத்து அவருடைய விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்” என காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

குண்டு போட்ட வைகைச்செல்வன்.. சிதறும் அறிவாலய கூட்டணி..? நழுவும் திருமா?

திமுக கூட்டணி குறித்து பேட்டியளித்த வைகைச்செல்வன் பெரிய குண்டைத் தூக்கி போட்டுள்ளார். அப்படி அவர் கூறியது என்ன? சிதறப்போகிறதா அறிவாலய கூட்டணி? இதனால் அறிவாலயம் அலறிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.

வைகைச் செல்வனுடன் சந்திப்பு.. அரசியல் எதுவும் பேசவில்லை- திருமாவளவன் விளக்கம்

வைகைச் செல்வன் உடனான சந்திப்பு "நட்பின் அடிப்படையில் நிகழ்ந்தது என்றும் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என்று அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை" என திருமாவளவன் கூறினார்.

தமிழர் நாகரிகம் எரிமலை போன்றது.. தவெக எச்சரிக்கை

தமிழ், தமிழர் நாகரிகம் என்பது எரிமலை போன்றது என்றும் கீழடி விவகாரத்தில் வீணாக கை வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தவெக எச்சரிக்கை விடுத்துள்ளது.

காதில் பூ சுற்றும் நயினார் நாகேந்திரன்.. செல்வப்பெருந்தகை விமர்சனம்

மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, பாஜகவின் அரசியல் மாநாடு அல்ல என்று காதில் பூ சுற்ற நயினார் நாகேந்திரன் முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

திமுக கூட்டணியில் ஓட்டையா? வைகைச்செல்வன் கொடுத்த ட்விஸ்ட்

சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனை, அதிமுகவினை சேர்ந்த வைகைச்செல்வன் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தார். அதுக்குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, திமுக கூட்டணியில் ஓட்டை என பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.