இனி எல்லாம் அப்படிதான்.. கட்டணத்தை உயர்த்திய RBI.. வாடிக்கையாளர்கள் கவலை
வரம்பை மீறிய ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து மே 1-ஆம் தேதி முதல் 23 ரூபாய் வசூல் செய்யப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வரம்பை மீறிய ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து மே 1-ஆம் தேதி முதல் 23 ரூபாய் வசூல் செய்யப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
காதலுக்கு கண்ணில்லை என சொல்வதை போல, இப்போதெல்லாம் திருமணமும் தடையில்லை என்றாகிவிட்டது. ஆனால், உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவமோ, இதற்கும் அடுத்த ரகம், அதுவும் அடடே ரகம்... அதாவது உசுருக்கு பயந்து தனது மனைவியை அவரது காதலனுக்கே தாரைவார்த்த சம்பவம் படு வைரலாகி வருகிறது.
தனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த மக்களுக்காக, கண்டிப்பாக நாடாளுமன்றம் சென்றே தீருவேன் என அடம்பிடித்து அசர வைத்துள்ளார் காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி எம்பியான இன்ஜினியர் ரஷீத். ஏன் இப்படி அடம்பிடிக்க வேண்டும்? அப்படி என்ன பஞ்சாயத்து? என்பதனை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மீரட் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் காணாமல் போன பொதுப்பணித்துறை பொறியாளர் உடல் அணையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசே சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சிவசேனா ஆதரவாளர்கள் குணால் கம்ராவின் புகைப்படத்தை பொதுக் கழிப்பிடத்தின் வெளியில் ஒட்டி கண்டனம் தெரிவித்துள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Work From Home வேலை தருவதாக கூறி பெண் ஒருவரிடம் மர்ம நபர்கள் சுமார் 15 லட்சத்திற்கு மேல் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் 7 அடி ஆழ குழியில் யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த குணால் கம்ராவின் கருத்து சிவசேனா ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் சூறைக்காற்றுடன் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
எஸ்.ஐ தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து அனுரூப்பை கைது செய்தனர்.
பஞ்சாப் காவல்துறை & மத்திய அரசின் துணை ராணுவம் இணைந்து பஞ்சாபில் அமைதியாக போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளதாக விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 18, 1981 அன்று, காக்கி உடை அணிந்த 17 பேர் தெஹுலி கிராமத்திற்குள் நுழைந்து 24 தலித்துகளை சுட்டுக் கொன்ற சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிராவில் நடந்து வரும் ஔரங்கசீப் கல்லறை தொடர்பான சர்ச்சை மற்றும் நாக்பூரில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு அடிப்படை காரணம் சமீபத்தில் வெளியான சாவா திரைப்படம் தான் என முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் பட்டியலில் மோசடியை தடுப்பதாக வாக்காளர் அட்டையுடன், ஆதாரை இணைப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.
மிசோரமை சேர்ந்த இளம் பாடகி எஸ்தர் ஹ்னாம்டே, கடந்த 2020 ஆம் ஆண்டில் "மா துஜே சலாம்" என்ற பாடலினை பாடிய வீடியோ வைரலானதே தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
தனிநபர்கள் வாங்கும் மூன்றாவது கார் இனி மின்சார வாகனமாக தான் இருக்க வேண்டும் என டெல்லி அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மாணவி ஒருவர் முனைவர் பட்ட படிப்பை மேற்கொள்வதற்காக ‘எஃப்- 1’ மாணவர் விசாவில் அமெரிக்கா சென்ற நிலையில் அவரது விசாவை அந்நாடு ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் நிதீஷ் குமார் கஞ்சாவுக்கு அடிமையானவர் போல பேசுகிறார் என்றும் அவையில் பெண்களை அவதூறாக பேசி வருகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவி குற்றம்சாட்டினார்.
வண்ணங்களை குறியீடாக கொண்டு பாஸ்போர்ட், பெற்றோர் பெயரை நீக்குதல், முகவரி குறித்த தகவலை டிஜிட்டல் முறையில் மாற்றுதல் என பாஸ்போர்ட் குறித்து 5 புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
உலகின் காற்று மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தையும், உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தையும் பிடித்துள்ளதாக 2024 ஆம் ஆண்டின் காற்று தர அறிக்கை வெளியாகியுள்ளது.
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில ஆளுநர் ஹரிபாவ் பாகடே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது தொகுதியில் 3-வது குழந்தையாக பெண் குழந்தை பெற்றால் ரூ.50,000, ஆண் குழந்தை பெற்றால் பசு மாடு வழங்கப்படும் என ஆந்திர எம்.பி அளித்த வாக்குறுதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.