K U M U D A M   N E W S
Promotional Banner

இந்தியா

கோவாவில் பரபரப்பு: மன்னிப்பு கேட்ட சுகாதாரத்துறை அமைச்சர்.. நிராகரித்த அரசு மருத்துவர்!

கோவாவில் சுகாதாரத்துறை அமைச்சரின் 'ஸ்டுடியோ மன்னிப்பை' நிராகரித்துள்ளார் அரசு மருத்துவர். தான் அவமானப்படுத்தப்பட்ட அதே மருத்துவமனையில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அரசு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

வீடு புகுந்து முதியவரை கொலை செய்த பெண்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

ஒடிசாவில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது முதியவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹனிமூன் ஜோடி மிஸ்ஸிங் வழக்கில் ட்விஸ்ட்.. வழிகாட்டி கொடுத்த துப்பு: 4 பேர் கைது

புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மனைவி மீது சந்தேகம்: தலையுடன் காவல் நிலையம் வந்த கணவர்-பெங்களூரில் பரபரப்பு

மனைவியை கொன்று தலையுடன் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ள கணவரின் செயல் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு கூட்டநெரிசலில் உயிரிழப்பு: கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

புதிய ரக மாம்பழத்திற்கு அமைச்சர் ’ராஜ்நாத் சிங்’ பெயரை சூட்டிய மாம்பழ மனிதர்!

இந்தியாவின் புகழ்பெற்ற 'மாம்பழ மனிதர்' என அழைக்கப்படும் கலீமுல்லா கான், புதிதாக உருவாக்கப்பட்ட மாம்பழ இரகத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயரை அடிப்படையாக கொண்டு 'ராஜ்நாத் ஆம்' (Rajnath Aam) எனப் பெயரிட்டுள்ளார்.

கோலியை கைது பண்ணுங்க.. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் ’Arrest kohli’ ஹேஷ்டாக்

ஆர்சிபி அணிக்காக நடைப்பெற்ற பாராட்டு விழாவினை காண, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியுள்ள சூழ்நிலையில் #Arrestkohli என்கிற ஹேஸ்டாக் எக்ஸ் வலைத்தளத்தில் ட்ரெண்டாகிறது.

ஹனிமூன் ஜோடி காணாமல் போன வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்.. மனைவி எங்கே?

இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர், மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி குறித்த தகவல் தற்போது வரை கிடைக்காத நிலையில் இருவீட்டார் குடும்பத்தினர் சிபிஐ விசாரணைக் கோரியுள்ளனர்.

ஈஃபிள் கோபுரத்தை மிஞ்சிய செனாப் பாலம்.. முழு தகவல்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஈஃபிள் கோபுரத்தை விட உயரமான இந்த பாலம், ரூ.43,780 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866-லிருந்து 5,364-ஆக உயர்ந்துள்ளது.

தாயின் ஒப்புதலுடன் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. சிக்கிய பாஜக பிரமுகர்

ஹரித்வாரில் பாஜகவினை சேர்ந்த பெண், அவரது சொந்த மகளை தனது ஆண் நண்பருக்கு இரையாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.பி. மஹூவா மொய்த்ரா ரகசிய திருமணம்.. கணவர் யார் தெரியுமா?

நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முகமாக விளங்கும் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஜெர்மனியில் ரகசியமாக பினாக்கி மிஸ்ராவினை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழப்பு.. பிரதமர் மோடி இரங்கல்!

பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

RCB வெற்றி விழா: 35 ஆயிரம் சீட்டுக்கு 3 லட்சம் பேர்.. கூட்ட நெரிசல் குறித்து முதல்வர் சித்தராமையா விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

59 கிலோ தங்கம் திருட்டு.. கொள்ளையர்கள் விட்டுச் சென்ற மாந்திரீக பொம்மையால் பரபரப்பு

கர்நாடகா மாநிலத்தில், மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் மற்றும் ரூ.5.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்ட மோனே ஹேப்பியோ? அங்கன்வாடியில் இனி முட்டை பிரியாணி!

3 வயது சிறுவன் வைத்த கோரிக்கையினை ஏற்று கேரளாவிலுள்ள அங்கன்வாடிகளில் இனி முட்டை பிரியாணி வழங்கப்படும் அம்மாநில சுகாதார, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு- கொந்தளிக்கும் விவசாயிகள்

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதம் மத்திய அரசு குறைத்துள்ளது எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாய், தந்தைக்குப் பதிலாக ‘பெற்றோர்’ - திருநங்கை தம்பதி தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருநங்கை தம்பதியரின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் தாய், தந்தைக்குப் பதிலாக ‘பெற்றோர்’ சொன்னால் போதுமானது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை(ஜூன்4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

வணிக சிலிண்டர் விலை ரூ.25 குறைவு

சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது.

Surf Excel: கறை நல்லது.. ஒரே ஆண்டில் 10 ஆயிரம் கோடி டர்ன் ஓவர்!

கறை நல்லது என தொலைக்காட்சிகளில் வரும் துணி சலவை பவுடர் சர்ப் எக்செல் விளம்பரமானது பலரின் விருப்பத்திற்குரிய விளம்பரங்களில் ஒன்றாகும். விளம்பரத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் பலரின் விருப்பத் தேர்வாக Surf Excel இருந்துள்ளது என்பது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட நிதி அறிக்கையின் வாயிலாக தற்போது தெரிய வந்துள்ளது.

குஜராத்தில் இருந்து மீட்பு குழுவினர் வருகை... கண்டெயினரை மீட்கும் பணி தீவிரம்!

வானியக்குடி கடலில் மிதக்கும் கண்டெயினரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத்தில் இருந்து மீட்பு குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.

2 லட்சத்திற்கு குறைவாக இருந்தால்.. தங்க நகைகடன் குறித்து சூப்பர் அறிவிப்பு!

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

பூஞ்ச் மக்கள் மறுவாழ்வு.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

"பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச், ஜம்மு காஷ்மீருக்கு மறுவாழ்வு தொகுப்பு வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாய்.. CHO பதவி வகிக்கும் ரெட்ரீவர்!

ஐதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், டென்வர் என்ற கோல்டன் ரெட்ரீவரை அதன் தலைமை மகிழ்ச்சி அதிகாரியாக (CHO) நியமித்ததற்காக வைரலாகி வருகிறது.